Pages

Search This Blog

Thursday, March 22, 2012

சோதிடத்துக்குத் தடை

மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் சோதிடப் பாடத் திட்டம் வைப்பது என்ற முடிவை எதிர்த்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. (20.1.2012)

அதற்குக் கை மேல் பலன் கிடைத்துள்ளது. சோதிடம் (Astrology) என்பது வேறு வானவியல் என்பது வேறு (Astronomy!) இரண்டும் ஒன்றல்ல படித்தவர்கள்கூட இதன் வேறுபாடுகளைப் புரிந்து கொள்ளாமல் ஒன்றோடு ஒன்றைப் போட்டுக் குழப்பிக் கொள்வது பரிதாபமே!

சோதிடர்கள் கோள் என்று சொல்லும் சூரியன் உண்மையில் நட்சத்திரமாகும். சோதிடத்தில் முக்கிய கோளான பூமிக்கு இடமில்லை அதே நேரத்தில் பூமியின் துணைக்கிரகமான சந்திரனுக்கு இடம் உண்டு.

இராகு, கேது என்று இரு கோள்களைக் குறிப்பிடுகிறார்களே உண்மையில் அப்படி கோள்கள் கிடையாது என்று வானவியல் அறுதியிட்டு அறை கிறது. செவ்வாய், வியாழன், சனி இவைகளுக்குத் துணைக்கோள்கள் முறையே 2,16,22 இருக்கின்றன. இவற்றிற்குச் சோதிடத்தில் பலன் எழுதி வைத் துள்ளனரா? இப்படி துணைக்கோள்கள் உண்டு அறியாதவர்கள் எப்படி இவற்றிற்குப் பலன் எழுதி வைத்திருக்க முடியும்?

பூமி நிலையானது என்றும், சூரியன்தான் பூமியைச் சுற்றி வருகிறது என்கிற சோதிடத்தை நம்பி பல்கலைக் கழகங்களில் பாடத் திட்டத்தில் சேர்ப்பது என்று எப்படிதான் துணிந்தனரோ தெரியவில்லை.

நம் நாட்டுக் கல்வியின் தரம் இதுதானா?

சோதிடர் கூறும் இராசி வட்டத்தில் பல கோடி நட்சத்திரங்கள் உண்டு. இவர்களுக்குத் தெரிந்த தெல்லாம் 27 நட்சத்திரங்களே.

ஒவ்வொரு கிரகமும் வெவ்வேறு இடைவெளி துரத்தில் இருக்கும் பொழுது கிரகங்கள் எப்படி இராசி வட்டத்துக்குள் குடியிருக்கின்றன?

யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ என்று புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் புதிய புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டும் வருகின்றன. இவற்றிற்குச் சோதிடத்தில் பலன் கிடையாது.

சனிக்கிரகம் பொல்லாதது - பாவம் பிடித்தது என்றெல்லாம் உளறி வைத்துள்ளனர். 28.1.2006 அன்று சூரியன் - பூமி - சனி மூன்றும் ஒரே நேர்கோட்டில் வந்தன. அதனால் என்ன பாவம் வந்து சூழ்ந்து விட்டது?

இப்படி நேர்நோட்டில் வந்ததைக்கூட விஞ் ஞானிகள்தானே தெரிவித்தனர். 10.2.2007 அன்று பூமிக்கு அருகில் வந்த சனிக்கிரகத்தை பெரியார் அறிவியல் மய்யத்தில் உள்ள கோளரங்கத்திற்குச் சென்று பொது மக்கள் பார்வையிட்டனரே! அப்படிப் பார்வையிட்டவர்களை சனிப் பகவான் பிடித்துக் கொண்டானோ!

கண்டுபிடிப்புகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படு கின்றன; நிரூபணம் செய்தாக வேண்டும். எடுத்துக்காட்டாக புளூட்டோ என்னும் கிரகம் பற்றி 1930இல் கூறப்பட்டது. 2006ஆம் ஆண்டில் கிரகத்திற்குரிய தகுதிகள் அதற்கு இல்லை என்று கூறி கோள்களின் பட்டியலிலிருந்து அகற்றி விட்டனர்.

இப்படி விஞ்ஞானம் புதுப்புது உண்மைகளைக் கண்டறியும் நிலையில், அறிவியல் வளராத காலத்தில் வெறும் கண்களால் விண்வெளியைப் பார்த்து அப்பொழுது இருந்த அறியும் பக்குவத்திற்கு ஏற்ப எதையோ கிறுக்கி வைத்தனர்.

அவற்றை நாளும் அறிவியல் வளரும் இந்தக் கால கட்டத்தில் கண்மூடித்தனமாக நம்புவது, பல்கலைக் கழகங்களில் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று விரும்புவது கடைந்தெடுத்த முட்டாள்தனம் என்பதல்லாமல் வேறு என்னவாம்?

அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் ஒரு பக்கத்தில் கூறுகிறது; இன்னொரு பக்கத்தில் பல்கலைக் கழகத்திலேயே அறிவியல் மனப்பான்மைக்கு விரோதமாகப் பாடத் திட்டத்தை வைக்கத் துடிக் கின்றனர் என்பது வெட்கக் கேடாகும்.

பகுத்தறிவு இயக்கமான திராவிடர் கழகம்தான் அதனைத் தடுத்து நிறுத்தியுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

சமூகப் புரட்சியாளர் தந்தை பெரியாரும் - புரட்சிகர மனிதநேயர் எம்.என்.ராயும்

(எம்.என்.ராய் 125ஆம் ஆண்டு: பிறந்தநாள் நினைவுகள் - மார்ச் 21) - தொகுப்பு:  நீட்சே
புரட்சிகர மனிதநேயர் எம்.என்.ராய் அவர்களின் 125ஆவது ஆண்டு பிறந்தநாளில் தந்தை பெரியார் மீது எம்.என்.ராய் வைத்திருந்த பற்று, மரியாதை. இரு தலைவர்களும் ஒரு கட்டத்தில் இணைந்து பணியாற்றிய தன்மையின் மூலம் இந்நாட்டுப் பொதுவாழ்க்கையின் முதிர்ச்சி நிலை எப்படிப்பட்டது என்பதை எளிதில் புரிந்துகொள்ள முடியும். தந்தை பெரியார் முறையான பள்ளிக் கல்வியை தொடர்ந்தவர் அல்ல. தனது சிந்தனையில் உதிர்த்த எண்ணங்கள், உணர்ந்து கொண்ட பட்டறிவு ஆகியவற்றின் அடிப்படையில் தான் செல்ல வேண்டிய பொதுவாழ்க்கைப் பயணத்தை தீர்மானமாக முடிவு செய்து - அந்த பயணத்தில் சிறிதளவும் மாற்றமின்றி நடை போட்டவர். தனது கொள்கை, அணுகுமுறைக்கு ஒவ்வாத நிலை தோன்றியபொழுது, தான் இணைந்து பணியாற்றிய அமைப்பிலிருந்து வெளியேறிக் கொண்டார். மனித இனத்தின் பெரும் சிறப்பியல்பான சுயமரியாதை மக்களிடம் பலப்பட வேண்டும் என கருதி அதற்காகவே ஒரு இயக்கத் தினை - சுயமரியாதை இயக்கம் கண்டவர் தந்தை பெரியார். தனது தலைமை வேண்டும் என விரும்பிய அமைப்புகளை தனது கொள்கைப் பயணத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக்கொண்டார். எந்தச் சூழலிலும் தான் ஒரு மனிதநேயர் என்பதை உணர்த்திக் கொண்டு வாழ்ந்து புரட்சி கண்டவர் தந்தை பெரியார். சுயசிந்தனையா ளராக வாழ்ந்து சமுதாயப் புரட்சிக்கான இயக்கம் அமைத்து பொதுவாழ்விற்கு பெருமை சேர்த்தவர் தந்தை பெரியார்.

லெனினை சந்தித்தவர்

எம்.என்.ராய் அவர்களும் முழுமையாகப் பள்ளிக் கல்வியைக் கற்றவர் அல்ல. தாமாகவே உலக நடப்புகளை, தத்துவக் கோட்பாடுகளை கற்றுக்கொண்டவர். சிறு வயதில் புரட்சிகர இயக்கங்களில் பங்கேற்று தீவிரவாதியாக வாழ்ந்தார். அதன் காரணமாகவே பள்ளிக்கூடத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆயுதப் போராட்டம் மூலமே இந்தியா பிரிட்டிஷாரிடமிருந்து அரசியல் விடுதலைப் பெற முடியும் என்ற கருத்தில் நாட்டம் கொண்டவராய், இந்தியாவை விட்டு ஜெர்மனிக்குச் செல்ல நினைத்து கிழக்கு ஆசிய நாடுகள் வழியாக மெக்சிகோ நாட்டிற்கு வந்தடைகிறார். கம்யூனிச கொள்கையில் நாட்டம் கொண்டவராக மாறி அந்த கொள்கைப் பரவலுக்கு இயக்க ரீதியாக மெக்சிகோவில் பங்காற்றுகிறார். பின்னர் அவருடைய கம்யூனிச கொள்கைப் பரப்பலின் அடிப்படையில் சோவியத் ரஷ்யாவில் நடைபெற்ற இரண்டாம் கம்யூனிச அகிலத்தில் (ளுநஉடினே ஊடிஅஅரளைவ ஐவேநசயேவடியேட) பங்குகொள்கிறார். புரட்சி செய்து அரசியல் ஆட்சியில் அமர்ந்த லெனினை சந்தித்து அரவது அறிவுறுத்தலில் தாஷ்கண்ட் பல்கலைக் கழகத்தில் கம்யூனிசம் பற்றிப் பாடம் போதித்தார். பின்னர் சீன நாட்டில் கம்யூனிசம் பரவிட அனுப்பப்பட்டார். பத்து ஆண்டு காலம் கம்யூனிச இயக்கத்தில் இருந்த பின்னர் லெனினை அடுத்து வந்த ஸ்டாலினின் அணுகுமுறையில் மாறுபட்டு அந்த இயக்கத்தினை விட்டு வெளியேறினார். 16 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவிற்கு திரும்பி, காங்கிரஸ் இயக்கத்தில் பணியாற்றி அந்த அமைப்பிடமும் மாறுபாடு கொண்டு வெளியேறுகிறார். புரட்சிகர ஜனநாயகக் கட்சி (சுயனஉயட னுநஅடிஉசயவஉ ஞயசவல) எனும் அரசியல் அமைப்பினை தோற்றுவிக்கின்றார். மனித நேயக் கருத்தினை முழுமையாக சொல்லி பணியாற்றிட அரசியல் தளம் உகந்தது அல்ல என கருதி, நிறைவாக புரட்சிகர மனிதநேயத்தினை  பரப்பிட மறுமலர்ச்சி மனிதநேய இயக்கத்தினை நிறுவுகிறார். இந்தியா அரசியல் விடுதலை பெற்ற பிறகு மனிதநேயத்தினை பரப்பிடும் பணியினை தனது எழுத்து, பேச்சு, பத்திரிகை செயல்பாடு என பல தளங்கள் அமைத்து பணியாற்றி வந்தார்.

பெரியார் மீது பெருமதிப்பு

தந்தை பெரியாரின் பணி பற்றி ஆரம்பகட்ட நாள் களிலேயே எம்.என்.ராய் அறிய நேர்ந்து அவர் மீது பெருமதிப்பு வைத்திருந்தார். இருவருக்கும் வயது வித்தியாசம் ஏழு ஆண்டுகள் (தந்தை பெரியார் மூத்தவர்) என இருந்தாலும், இருவரும் ஒருவருக்கொருவர் இணக்கமாக, சரியான புரிதலுடன் பொதுவாழ்க்கையில் பங்கேற்று சமுதாய மேம்பாட்டுப் பணி ஆற்றினர்.
மிகவும் சங்கடத்துடன் தந்தை பெரியார் ஒரு முறை கூட்டத்தில் கூறிய செய்தி இது:

சொல்வதற்கே வெட்கம்

எம்.என்.ராய் என்ற அறிஞர் ரஷ்யாவில் இருந்தவர். சில காரணங்களால் அவர் ரஷ்யாவைவிட்டு வந்துவிட்டார். அவரிடம் நம் தோழர்கள் நான் எழுதிய புத்தகங்களைக்காட்டி இருக்கின்றனர். அவர் அவைகளை பார்த்துவிட்டு என்னைக் காண வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார். நானும் அவரை காண வேண்டும் என்று எண்ணி இருந்தேன். ஒரு முறை சென்னைக்கு வந்தபோது நான் அவரை சந்திக்கச் சென்றேன். என்னைக் கண்டதும் அவர் என்ன செய்தார் தெரியுமா? எனக்கே சொல்வதற்கு வெட்கமாக இருக்கிறது. என் காலில் விழுந்து வணங்கினார். நான் மிகவும் சங்கடப்பட்டு ஒரு பகுத்தறிவாதி இப்படி நடந்து கொள்ளலாமா! என்று கேட்டேன்.

பிறகு சில நாள்கள் நான் அவருடனேயே சேர்ந்து பிரச் சாரம் செய்து வந்தேன். ஒரு முறை அவர் டேராடூனில் ஒரு விருந்து ஏற்பாடு செய்தார்.விருந்துக்கு வந்திருந்தவர்களி டையே நான் எழுதிய புத்தகங்களைப் பற்றி விளக்கம் செய்து என்னை அறிமுகப்படுத்தினார். அங்கு வந்திருந்தவர்கள் அனைவரும் பல முறை எழுந்து எனக்கு மரியாதை செய்தனர். (விடுதலை 22.4.1965).

தந்தை பெரியாரும் எம்.என்.ராய். அவர்களும் காங்கிரஸ் இயக்கத்தில் இருந்து பணியாற்றிவிட்டு கொள்கை அணுகு முறை வேறுபாட்டால் அதிலிருந்து வெளியேறியவர்கள். 1939ஆம்ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் வல்லபாய் படேல் தன்னிச்சையாக நடந்து கொண்ட விதத்தைப் பற்றி படேல் கூட்டத்தின் எதேச்சதி காரம் எனும் தலைப்பில் தனது பத்திரிகையான இண்டி பெண்டன்ட் இந்தியா (ஐனேநயீநனேநவே ஐனேயை) வில் எம்.என்.ராய் தலையங்கம் தீட்டினார். பார்லிமெண்ட் முறையைப் பற்றி பாராட்டி பேசுகிறவர் களே தம் காரியம் கைக்கூட வேண்டுமானால் அதைப் புறக்கணிக்கிறார்கள். புரட்சியை விரும்புகிறவர்கள் ஏன் அவ்வழி பற்றி நடக்கலாகாது? நிலைமைகளை மாற்ற விரும்புவதே புரட்சிதான். காந்தி கட்சியை சேர்ந்தவர்களின் தலைமைக்கும் சாமானிய காங்கிரஸ்காரர்களுக்கும் சமரசம் செய்ய முடியாத விரோத குணங்கள் இருக்கின்றன. (குடிஅரசு, 28.5.1939)

படிக்கும்பொழுது மேற்குறிப்பிட்ட வரிகள் 1926ஆம் ஆண்டில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் உயர்ஜாதி ஆதிக்கவாதிகளின் ஆளுமையில் காங்கிரஸ் செயல்படுகிறது என்று கூறி அதிலிருந்து தந்தை பெரியார் வெளியேறிய நிகழ்வுகளை நினைவூட்டுகின்றன.

எம்.என்.ராய் அவர்களின் கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்து தனது குடிஅரசு இதழில் தந்தை பெரியார் வெளியிட்டு வந்தார். 31.12.1939 நாளிட்ட குடிஅரசில் மதமும் மூடநம்பிக்கையும் எனும் தலைப்பில் எம்.என்.ராய் கட்டுரை வெளியிடப்பட்டது. அந்த கட்டுரையில் எம்.என்.ராய் அவர்கள்,

மூடநம்பிக்கையும், வைதீகக் கொடுமையும் இணைந்து பிறந்த இரட்டை குழந்தைகள் என எளிமையாக வலிமை யான கருத்தை எடுத்து வைக்கிறார். மேலும் அதே கட்டுரை யின் ஒரு பகுதியில், ஆரம்பக் கால மக்கள் ஜடபொருள்களை தங்கள் இறைவனாக ஏற்று வணங்கி வந்தார்கள். உதா ரணமாக கல், மரம், (மிருகம்கூட) இவைகளால் நாகரிகமற்ற முறையில் நிர்மாணிக்கப்பட்ட பல கிளைகளையும்தான் தெய்வமாகக் கொண்டாடினார்கள். அந்த கொள்கை அடைந்த வளர்ச்சியின் பயன்தான் பல்வேறு கடவுள்களில் நம்பிக்கை உண்டாயிற்று. அதன் வளர்ச்சி அவரவர்கள் கொண்ட மனோ சக்தியின்படி உருவங்களாக உதயமாயிற்று. இவை எப்படி ஒன்றிலிருந்து ஒன்று வளர்ந்தது என்பதை அன்றைய மக்கள் அறியமாட்டார்கள். அவ்வளவு தெளிவாக ஆதி காலத்தில் இந்த கடவுள்கள் மேல் மக்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கைக்குக் காரணம் அவைதான். மனிதசக்திக்கு மேம்பட்ட சக்தியை உடையன என்று எண்ணிய எண்ணம் இவைகளுக்குள்ள காரணங்கள் ஏராளமாய் உண்டு. இத்தகைய நம்பிக்கைகளுக்கும் எண்ணங்களுக்கும் ஆணிவேர், அன்று ஏற்பட்ட இடி மின்னல் பூகம்பம் போன்றவையே. இந்த எதிர்பாரா சம்பவங்களால் ஏற்பட்ட இடையூறுகளே காரணம் என்னும் மூடநம்பிக்கையில் முளைத்த பயம் என்ற பழுதுள்ள சொல்தான். இந்த பயத்தைப் போக்க கடவுளைத் தஞ்சம் அடைந்தான் மனிதன். தன்னை தியாகம் செய்தால்தான் கடவுள் கிருபை கிடைக்கும் என எண்ணினான். அந்த எண்ணம் ஆழமாக இடங்கொண்டது. இந்நாட்டின் மக்கள் மனதில், இந்த தியாகத்தில் இறங்கினார்கள் ஏராளமானோர்

இந்நாட்டுமக்கள். புரோகிதக் கூட்டம்

காலப்போக்கில் இந்த மக்களைக் கொண்ட கூட்டம் ஒரு புரோகிதக் கூட்டமாக ஏற்பட்டது. இவர்கள் இறைவனின் ஆசியினைப் பெற்றவர்கள் என்ற எண்ணம் வளர்ந்தது. அதன் பயனாய் கடவுளின் மாற்றமுடியா அபிப்பிராயங்களை அறியும் ஆற்றல் உள்ளவர்களும், அந்த கூட்டம்தான் என்ற அபிப்பிராயமும், ஆதரவும் பெற்றது அதிகமாக. இந்த கடவுளின் ஆசியினைப்பெற்றவர்கள் அநேக மார்க்கங்களை ஆக்கினார்கள். இந்த கூட்டத்தின் புதிய மார்க்கமும், மக்களின் மூடநம்பிக்கையும் சேர்ந்து புரோகித கூட்டத்தை புதியதொரு மேலான ஸ்தானத்தில் வைத்துவிட்டது. அவர்கள்தான் சர்வ சக்தி உள்ளவர்கள் என்ற இடத்தை இந்நாட்டில் அடைந்து விட்டார்கள். (குடிஅரசு, 31.12.1939). மேலும், விடுதலையில் வெளியிடப்பட்ட முரண்பட்ட மதமும் மூடநம்பிக்கையும் அழியவேண்டும் எனும் கட்டு ரையில் எம்.என்.ராய். குறிப்பிடுகிறார்:

மேலைநாட்டு மறுமலர்ச்சியையும், இந்நாட்டு மறுமலர்ச் சியையும் நாம் ஆராயப் புகுவோம். மேலைநாட்டு அய்ரோப் பியர்களின் மறுமலர்ச்சி இருவகை கொண்டது. முதலாவது, அய்ரோப்பியர்களின் முன்னோர்கள் பற்றிய தத்துவங் களையும், அவரது பழக்கவழக்கங்களையும், பண்பாடுகளை யும், அறிவதாகும். இரண்டாவது பழங்கால கிரேக்கர் களிடமிருந்து அய்ரோப்பிய அறிஞர்கள் அறிவியல் கலை அறிவையும் தத்துவங்களையும் பரப்பியது பற்றி அறிவதாகும்.

நம்முடைய பழங்கால புராணம் கட்டுக்கதை, மதம் ஆகியவைகளிலிருந்து நம்மை விடுவித்து மனிதப்பண்பை வளர்க்க வேண்டும். நமக்கு நம் புராணங்களிலும் இதிகாசங் களிலும் ஒருவிதப் பயனும் இல்லை. அவை நம்மை புத்துல கிற்கோ, மனித பண்பை வளர்ப்பதற்கோ பயன்படாது. (விடுதலை, 12.12.1949)

கட்டுரை வரிகளைப் படிக்கும்பொழுது எம்.என்.ராய் கருத்துகள் தந்தை பெரியாரது கருத்துக்களோடு, அவரது கணிப்புகளோடு எப்படி ஒத்துபோய் இருக்கின்றார் என அறிய முடியும். இருவரது கட்டுரைகளிலும் எழுதியவர் பெயரை மாற்றிப் போட்டாலும், கருத்து விளக்கம் ஒன்றாகத்தான் அமையும். அது மாற்றம் பெறாது. ஒருமித்த கருத்தினை உரத்துச் சொன்னவர்கள் தந்தைபெரியாரும், எம்.என்.ராயும். இவ்வாறு ஒத்த கருத்துக்கொண்ட சமுதாய புரட்சியாளர்கள் இணைந்து பணியாற்றியதில் என்ன வியப்பு இருக்க முடியும்?

1941 ஆம் ஆண்டு அந்நாளைய சென்னை ராஜதானியில் எம்.என்.ராய் அவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு கூட்டங்களில் உரையாற்றுகிறார். 20.2.1941 அன்று மாலை சென்னை வி.பி.ஹாலில் தேசிய ஜனநாயக கட்சி மற்றும் அமிதவாத ஜனநாயக கட்சி சார்பிலும் நடைபெற்ற கூட்டத்தில் தந்தை பெரியார் தலைமையேற்றிட எம்.என்.ராய். ஆற்றிய உரையின் சில பகுதிகள்:


பார்ப்பனர் அல்லாதார் இயக்கச் சிறப்பு

தென்னிந்தியாவில் தேசிய இயக்கம் என்பது இருக்கு மாயின் அது பார்ப்பனர் அல்லாதாரை பெருவாரியாகக் கொண்ட இயக்கமாகத்தான் இருக்க வேண்டும். இங்கு பார்ப்பனர் அல்லாத மக்களின் ஆதரவு பெறாத எந்த இயக்கமும் நம் நாட்டு விடுதலை இயக்கமாக இருக்க முடியாது....

நாட்டு மக்களுக்கு உகந்ததோர் சுதந்திரம் வெறும் அரசியல் சுதந்திரம் மட்டுமன்றி சமய, சமூக, வர்க்க, வகுப்பு, ஏற்றத் தாழ்வு வித்தியாசம் பாராட்டாது, நாட்டு மக்கள் அனை வருக்கும் சகல விதங்களிலும் உண்மை, சுயேச்சையும், சுதந்திரமும் தருவதாக இருத்தல் இன்றியமையாதது......

அகிம்சை கொள்கை என்று பேசப்படுவதும் வெறும் பித்தலாட்டமாகும்....

பாசிச எதிர்ப்புப் பிரச்சாரத்தை நான் மேற்கொண்ட தால்தான் என்னை காங்கிரஸில் இருந்து வெளிக்கடத்தி விட்டார்கள். காங்கிரஸ் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் பிரதிநிதி என்று உரிமைப்பாராட்டிக் கொள்வது எந்த வகையிலும் பொருத்தமானதாகாது. ஏனெனில் காங்கிரஸில் சேராமல் 80 சதவிகித மக்கள் இங்கு இருக்கின்றனர். எனவே இவ்விதம் தகாத முறையில் உரிமைக்காண்டு பேசுவது ஜனநாயக் கொள்கையோ, சுதந்திர கொள்கையோ ஆகாது. (விடுதலை, 22.2.1941)
23.2.1941 அன்று சென்னை வாலிபர் மன்றத்தில் பங்கேற்று கூட்டாட்சி தத்துவம் பற்றி எம்.என்.ராய் பேசுகிறார். பேச்சை துவக்குவதற்கு முன்பு கீழ்க்கண்ட கருத்தை மிகவும் வருத்தத்துடன் எம்.என்.ராய் வெளியிட்டார். சென்னை பத்திரிகைகள் (ஆரியத்தாள்கள்) என்னை ஆதரிக்க பின்னுற் றும், என் கொள்கைகளை நாட்டினர் அறிந்து கொள்ளக் கூடாது என்ற கொள்கையும் கொண்டு, என் பொது மேடைப் பேச்சுகளை ஒழுங்காகவும் உண்மையாகவும் பிரசுரிக்க மறுத்த ஒரு பட்ச போக்கு கொண்டிருப்பது கண்டு நான் மிகுந்த ஏமாற்றமும் வருத்தமும் அடைய வேண்டி இருக்கிறது.

கூட்டாட்சித் தத்துவம் பற்றி அந்தக் கூட்டத்தில் எம்.என்.ராய் வெளிப்படுத்திய கருத்துகள்:

இந்தியாவை ஒரு ஆட்சி சரகமாக்குவதைவிட அய்ரோப்பா கண்டத்தை ஒரு ஆட்சிசரகமாக்குவது எளிதா கலாம். நாற்புற இயற்கை எல்லைக்குட்பட்ட இந்த இந்தியா நாட்டிலே உள்ள எண்ணற்ற பாஷைகள், கணக்கற்ற மதங்கள், பலதரப்பட்ட கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்கள், சம்பிரதாயக் கொள்கை வேறுபாடுகள், அய்ரோப்பா கண்டத்தில் உள்ளதைவிட பல மடங்கு அதிகமாக இருக்கின்றன. மனித சகோதரத்துவத்தை ஏற்படுத்தி அதன் மூலம் தேசிய எல்லை மதில் கட்டி விடலாம் என்று அவர்கள் (காங்கிரஸ்) பெரும் கனவு கண்டு வருகிறார்கள். இது வீண் ஆகாயக் கோட்டை. இதைவிடுத்து வர்க்கத்திற்கு ஒரு வட்டாரம் அமைக்க தோது செய்வதுதான் தகுந்த உபாயமாகும் என்பதை இவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்தியா கூட்டாட்சி பற்றி இவர்கள் வண்டி வண்டியாய் பேசுகின்றனர். ஆயினும் அந்த கூட்டாட்சியின் அங்க அவயவ லட்சணங்கள் இன்னின் னவை என்பது பற்றி உருப்படியான பேச்சைக் காணோம். இந்தியா பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் ஒரு பகுதியாக இருப்பதை வரவேற்க இந்திய அரசியல்வாதிகள் பலர் சித்தமாக இருக்கின்றனர். இப்படி இருக்க இந்தியா தனி வட்டாரங்களை கொண்ட கூட்டாட்சி நாடாக இருப்பதை இவர்கள் ஏன் எதிர்க்கவேண்டும்? இந்த உரிமையை ஏன் மறுக்கின்றனர்...... வர்க்க வகுப்பு கலாச்சார மொழி வட்டார பிரிவினை செயற்கைக் கற்பனை சிருஷ்டியல்ல. (விடுதலை, 25.4.1941)

எம்.என்.ராய் எழுபது ஆண்டுகளுக்கு முன் பேசிய வரிகள், இன்றும் பொருந்தி வரும் சூழல்கள் நிலவுவதை, படம் பிடித்து காட்டுவதாய் உள்ளது.

காங்கிரஸ் இயக்கத்தில் எம்.என்.ராய் அவர்கள் இருந்தபொழுதும் சென்னைக்கு வந்துள்ளார். காங்கிரஸ் இயக்கத்தை விட்டு வெளியேறிய பின்பும் சென்னைக்கு வருகை தந்துள்ளார். இரண்டு சூழல்களிலும், எம்.என்.ராய் பார்க்கப்பட்ட பார்வையினை விடுதலை நாளிதழின் (25.2.1941) தலையங்கம் விரிவாக வெளிப்படுத்துகிறது.

தோழர் ராய் அவர்கள் 2, 3 வருடங்களுக்குமுன் ஒரு தடவை இந்த நாட்டுக்கு வந்திருந்தாலும், அப்போது அவருக்கு இம்மாதிரியான ஆடம்பர வரவேற்பும் பெருங் கூட்டங்களும் நடக்கவில்லை. ஆனாலும், பார்ப்பன ஸ்தாபன மாகிய காங்கிரஸின் ஆளாக அப்போது வந்தபடியால் அவ ருக்கு பார்ப்பனப் பத்திரிகைள் ஏராளமான விளம்பரங்களும், உண்மைக்கு மாறான தடபுடல் செய்திகளும் பிரசுரித்து பயன் படுத்திக்கொண்டன. ஆனால், அதே பார்ப்பனர்கள் இப்போது ராய் அவர்கள் பார்ப்பன ஸ்தாபனமான காங்கிரஸை விட்டுப் பிரிந்து அதன் (காங்கிரஸின்) உண்மைத்தன்மையை வெளிப்படுத்துகிற வராய் வந்ததால் பார்ப்பன பத்திரிகைகள் அவரது வரவைப் பற்றியும், வரவேற்பைப் பற்றியும் அவரது மீட்டிங்குகளை பற்றியும் திரித்தும், மக்கள் சாதாரணமாகவும் தப்பாகவும் நினைக்கும்படியும் பிரசுரிக்க வேண்டுமோ அவ்வளவு தூரம் பிரசுரித்து வந்தன - வருகின்றன. இந்த விபரத்தை தோழர் ராய் அவர்கள் உணர்ந்து இந்நாட்டு பத்திரிகைகள் சரியாக நடந்துகொள்ளவில்லை என்று பேசியிருக்கின்றார்.

இந்தக் கஷ்டத்தை இந்தநாட்டில் ராய் ஒருவர் மாத்திரம் அனுபவிக்கவில்லை. ஒரு காலத்தில் பண்டிதர் ஜவகர்லால் அவர்கள் வந்தபொழுது, இந்த நாட்டு பார்ப்பனர்கள் காந்தியை அழுத்திவிட்டு சீனிவாச அய்யங்காரை தலைவ ராக்க கூலிப்பிரச்சாரங்கள் செய்கின்றன என்று குறைகூறிய காலத்தில் அவரது பேச்சையும், நடத்தையையும், திரித்துக்கூறி பிரசுரித்தன. அவரைப் பற்றியும் கேவலமாக எழுதின. பண்டித நேரு அவர்கள் ஒரு காங்கிரஸ் அறிக்கையில் கூட தென்னிந்திய பத்திரிகைகளைக் கண்டித்து குறிப்புக்காட்டி இருந்தார். தோழர் காந்தியாரைப் பற்றிக்கூட ஒரு காலத்தில் அவர் தென்னிந்திய பார்ப்பனர்களுக்கு அனுகூலம் இல்லாத விஷயங்களைப் பற்றிப் பிரச்சாரம் செய்த காலத்தில் அவரையும் அவரது கொள்கையையும் திரித்துக்கூறி எழுதினார்கள். இதைப் பற்றியும் அவர் தென்னிந்தியாவில் ஒரு தடவைக்கு மேல் தென்னிந்திய பத்திரிகைகளை கண்டித்துப் பேசி இருக்கிறார்.

தோழர் ராய் அவர்களது முக்கியத் திட்டங்கள் இரண்டு ஒன்று, யுத்தத்தில் பிரிட்டிஷாருக்கு உதவி செய்ய வேண்டும் என்பது. இரண்டு: காங்கிரஸ் பொது ஜனங்களுடைய ஸ்தாபனம் அல்ல என்பதையும் ஏழை மக்களுக்கு கேடானது என்பதையும் பொது மக்களுக்கு விளக்க வேண்டும் என்பது. இந்த இரண்டு விசயத்திலும் ஜஸ்டிஸ் கட்சிக்கு எவ்வித அபிப்ராய பேதமும் இல்லை. தோழர் ராய் அவர்களுக்கு முன்னதாகவே நமது ஜஸ்டிஸ் கட்சி இக்கொள்கையை கொண்டிருந்து வருகிறது. தோழர் எம்.என்.ராய். வரவு எனும் தலைப்பில் வெளி வந்த தலையங்க மேற்குறிப்பிட்ட வரிகள், திராவிடர் இயக்கம் நூறாண்டு காணும் நிலையிலும் அன்று நிலவிய சில நாட்டு நடப்புகள் இன்றும் தொடர்கின்ற நிலைமைகளை வெளிப்படுத்து கின்றன. ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் நீடிக்கின்ற நிலைமைகள் புதிய வடிவில் தொடர்கின்றன. தந்தை பெரியாரும் எம்.என்.ராயும் மானிடம் மேம்பட அரும்பாடுபட்ட உன்னதத் தலைவர்கள். அவர்களது சிந்தனை களையும், கருத்துப் பிரச்சாரங்களையும் மேலும் வலிமையாகப் பயன்படுத்த வேண்டிய சூழல்கள் உருவாகி வருகின்றன. அவர்களது நினைவுகளைப் போற்றுதல் என்பதைவிட அவர்களது கருத்துகளை மக்களிடையே பரப்புவதன் மூலம் அவர்கள் அமைத்திட நினைத்த புதிய சமுதாயத்தை முழுமையாகப் படைத்திட முடியும். சமத்துவ நிலை பெருகி மனிதநேயம், மக்களிடம் நிலவிட இயலும். புவியியல் எல்லைகள், அரசியல் தடுப்புகள், மொழி இடைஞ்சல்கள் இவைகளைத் தாண்டி மனிதஇனம் மாண்படைய உழைத்த அறிஞர்களை, தலைவர்களை பெரியார் இயக்கம் போற்றிடத் தவறியதில்லை. அவர்களது கருத்துகளை எடுத்துக்கூறிட தயங்கியதும் இல்லை. மனிதநேய கருத்துப்ப ரவலில் உலகலாவிய பரந்துபட்ட போக்கே பெரியார் இயக் கத்தின் அணுகுமுறையாக, அதன் இன்றைய தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் வழிகாட்டுதலில் கடைப் பிடிக்கப்பட்டுவருகிறது.

மனித இனம் சிறிய உயிரினங்களிலிருந்து படிப்படியாக வளர்ந்து உருவாகியது எனும் பரிணாமக் கொள்கையினை நிறுவிய சார்லஸ் டார்வின் 200ஆவது பிறந்தநாள் விழா வினை தமிழ்நாடெங்கும் பெரியார் இயக்கம் கொண்டாடியது. அண்மையில் அமெரிக்க நாட்டில் காலமான, நாத்திகம் பேசிய சீரிய எழுத்தாளர் கிரிஸ்டோபர் ஹிச்சன்ஸ் அவர்களுக்கும் படத்திறப்பு நடத்தி, அவர்தம் பெருமையினைப் போற்றியது. இந்நாட்டு நாத்திகர், மூடநம்பிக்கை ஒழிப்புப் போராளி பிரேமானந்த் அவர்களுக்கும் இந்திய பகுத்தறிவாளர் சங்க கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் முன்னிலையில் படத்திறப்பு நிகழ்ச்சி நடத்தியது.

தந்தை பெரியார் உடன் இணைந்து பணியாற்றி மனிதநேய கருத்துகளைப் பரப்பிய எம்.என்.ராய். அவர்களின் 125ஆவது பிறந்தநாள் விழாவினையும் பெரியார் இயக்கத்தின் அங்க மான பகுத்தறிவாளர் கழகம் இன்று (21.3.2012) சென்னையில் நடத்துகிறது. பெரியாருடன் பணியாற்றிய எம்.என்.ராய் பற்றி பெரியாரின் கொள்கை வழித்தோன்றல் தமிழர் தலைவர் கி.வீரமணி, பேருரையாற்றுகின்றார். பேராசிரியப் பெருமக்கள் பங்கேற்றிட உள்ளனர். மானிடம் மேம்பட பாடுபட்ட தலைவர் களின் கருத்துகளை மக்களிடம் கொண்டுச்செல்லும் பெரியார் இயக்கத்தின் பணி ஒருநாள் நிகழ்வல்ல; அது தொடர்பணி; தொய்வில்லா பணி; அந்த தொண்டறப் பணிகள் என்றும் தொடரும்!

வாழ்க தந்தை பெரியார்! வாழ்க எம்.என்.ராய்!

வளர்க அவர்தம் சிந்தனை நடைமுறைகள்!

பெருகிடுக மனிதநேயம்!

எம்.என்.ராய் சிறு குறிப்பு

மானேபேந்திர நாத் ராய் என அழைக்கப்படும் புரட்சிகர மனிதநேயர் எம்.என்.ராய் அவர்களின் இயற்பெயர் நரேந்திரநாத் பட்டாச்சார்யா. இந்திய தேசீய புரட்சியாளர் என அழைக்கப்படும் எம்.என்.ராய் பன்னாட்டு அளவில் அறிப்பட்ட புரட்சிகரப் போராளி மற்றும் அரசியல் கோட்பாட்டு வித்தகர் ஆவார். 1887 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆவது நாள் பிரிட்டிஷ் இந்தியாவின், வங்காளத்தில் சங்கிரிபோடா எனும் ஊரில் பிறந்த எம்.என்.ராய், 1954 ஆம் ஆண்டு ஜனவரி 25இல் டேராடூனில் மறைந்தார்.

66 ஆண்டு காலம் வாழ்ந்த எம்.என்.ராய் அவர்களது பொது வாழ்க்கைப் பணி மகத்தானது. மனிதநேயம் மக்களிடம் பல்கிப் பெருக பாடுபட்ட மாண்பாளராக திகழ்ந்தார். அவரது வாழ்க்கைப் பயணம் உலகளாவியது. தந்தை பெரியாரது வரிகளில் இதோ எம்.என்.ராய்: தோழர் ராய் சாமானியப்பட்டவர் அல்லர். அவர் ஒரு மாபெரும் உலக இயக்கத்தில் தொண்டாற்றியவர். உலகம் முழுவதும் பெயர் பெற்றவர். நல்ல அனுபவ சாலி. பலவித கஷ்ட நஷ்டங்களை அனுபவித்தவர். இன்றைய தேச பத்கர்கள் என்று சொல்லிக்கொள்ளும் எவரையும்விட அதிக காலம் தண்டனை அடைந்து சிறையில் அல்லல்பட்டவர்.

எம்.என்.ராய் அவர்களது அப்பழுக்கற்ற பொது வாழ்க்கைப் பணிக்கு தந்தை பெரியாரின் கூற்றே சரியான அடையாளமாகும்.http://viduthalai.in/page-6/30407.html

Sunday, March 18, 2012

நித்யானந்தாவே, ஓடாதே நில்

நித்யானந்தா, நித்யானந்தா என்ற ஒரு காஷாயதாரி சென்னைக்கு வந்து ஆடம்பரமான ஓட்டலில் தங்கி அட்டகாசமாக செய்தியாளர்களுக்குப் பேட்டி கொடுத்துள்ளார்.

இந்த அவசியம் அவருக்கு ஏன் வந்தது? தான் உத்தம புத்திரன் என்று நிரூபிக்க வேண்டிய அவசரமான நெருக்கடிப் பிரசவம் ஏன் ஏற்பட்டது?

திராவிடர் கழகத் தலைவரை ஏன் இப்படி விழுந்து பிராண்டுகிறார்?

திராவிடர் கழகம் இது போன்ற காஷாயதாரிகளின் கபட கபாலங்களை நொறுக்கி வருகிறதே என்ற ஆத்திரத்தால், ஆபாச ஆசாமியைக் கைது செய் என்று ஆர்ப்பாட்டம் நடத்தியது அந்த ஆத்திரத்தால்தானே!

திராவிடர் கழகத் தலைவர் மீது விழுந்து சேற்றை வாரி இறைப்பதற்கு முன், முதலில் அவரின் சீடர்களுக்கு ஏற்பட்ட கோபத்தைப் பற்றி என்ன சொல்கிறார்?

நடிகை ஒருவருடன் இவர் நடத்திய கோபால கிருஷ்ண லீலைக் காட்சியைத் தொலைக் காட்சியில் பார்த்த பக்தர்கள்தானே, சீடர்கள்தானே நித்யானந்தாவின் ஆசிரமங்களை நாடெங்கும் சூறையாடினார்கள்? தீவைத்துக் கொளுத்தினார்கள்? அதனைக் கண்டிக்கத் துப்பில்லை - ஆசிரியர் வீரமணி அவர்களின் மீது ஆக்ரோஷமாகப் பாய்வானேன்?

இவர் யோக்கிய சிகாமணி என்றால், குற்றமற்ற கோமான் என்றால், ஏன் வடக்கே ஓடித் தலைமறைவாக வேண்டும்?

கொலைகாரர்கள் கூட நாணயமாக நீதிமன்றத்தில் ஆஜராகும் ஒரு நிலையில், ஆண்டவனோடு நேரில் அளவளாவும் இந்த ஆசாமி ஏன் ஓடி ஒளிய வேண்டும்?

இவரது பரமார்த்த சீடர் ஒருவர் அமெரிக்கர். அவர் பெயர் டக்ளஸ் மெக்கெல்லர். இப்படிப்பட்டவர்கள் எல்லாம் இந்தச் சாமியார்களின் வேட விளக்கில் விட்டில் பூச்சிகளாக வீழ்கிறார்கள்.

அந்த அமெரிக்க சீடர் கலிபோர்னியா அட்டர்னி ஜெனரலிடம் நித்யானந்தா பற்றி புகார் கொடுத்துள்ளாரே - மறுக்க முடியுமா?

அறைகளில் நித்யானந்தா பெண்களுடன் இருக்கும் போது என்னைத்தான் பாதுகாவலாக நிறுத்தி வைப்பார்; நித்யானந்தா நடத்தும் யாக குண்டங்களில் காய்ந்த கஞ்சா விதைகளைப் போடுவார்.

2007 ஆம் ஆண்டு நித்யானந்தா தமிழ் சினிமா நடிகை ஒருவரை கலிபோர்னியாவுக்குக் கூட்டி வந்தாரு. அந்த நடிகை திருமணம் ஆனவர்தான். அந்த நடிகை கூட என் வீட்டில் 15 நாள் தங்கி இருந்தார். அந்த நடிகைக்கும், நித்யானந்தாவுக்கும் செக்ஷூவல் ரிலேஷன்ஷிப் இருந்ததை நான் புரிஞ்சிக்கிட்டேன். அதைப் பற்றி அவரிடமே கேட்டேன்.

கடவுளை அடைய ஆனந்தமான வழி இதுதான்னு என்னிடம் சிரிச்சிக்கிட்டே சொன்னார் என்று எழுத்து வடிவத்திலேயே கலிபோர்னியா அட்டர்னி ஜெனரலிடம் கொடுத்துள்ளாரே அவரின் அமெரிக்க அந்தரங்க சீடர்.

ஆசிரமத்திற்கு வந்த பல பெண்களுடன் குரூப் செக்ஸ் வச்சுகிட்டதையும் என்னால் உணர முடிந்தது. பல பெண்களோடு சந்தோஷமாக அவர் இருந்ததை அவர் மறைக்கவோ, மறுக்கவோ இல்லை.

சனாதன கோவிலில் நித்யானந்தாவின் பயிற்சிப் பட்டறைகள் நடக்கும். கோயிலோட கர்ப்பக் கிரகத்துக்குப் பக்கத்திலேயே சகல வசதிகளோடு கூடிய சொகுசு அறை இருக்கும். அவருக்காக உருவாக்கப்பட்ட பிரத்தியேக மான அறை அது என்று அவரின் சீடர்தானே விலா வாரியாகக் குறிப்பிட்டுள்ளார்.

கருநாடக மாநிலக் காவல் துறை தயாரித்துள்ள குற்றப் பத்திரிகை நித்தியானந்தாவின் பல ஆபாச அணுகுண்டுகளை வெடிக்கச் செய்திருக்கிறது. "நான் கிருஷ்ணன். நீ என்னோட கோபிகை!" என்ற வசனத்தைத்தான் பக்தைகளிடம் அடிக்கடி கூறுவாராம் இந்த நித்தியானந்தா. (அதாவது நித்யமும் ஆனந்தமாக இருக்கும் ஆசாமி என்றும் பொருள் கொள்ளலாம்).

பாலுறவு மூலம் மோட்சத்தை அடையமுடியும் என்ற நிபந்தனையை ஏற்கும் ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பம் வாங்கிக் கொண்டு பெண்களிடம் லீலைகளை நடத்தினார் என்றால் இந்த ஆசாமி எப்படிப்பட்ட கில்லாடியாக இருக்க வேண்டும். இந்த ஆபாசமான தகவல்கள் கருநாடக் காவல்துறையின் 430 பக்கக் குற்றப் பத்திரிகையில் இடம் பெற்றுள்ளனவே!

இவையெல்லாம் தவறான தகவல்கள் என்று நீதி மன்றத்தில் நிரூபித்து நிரபராதி என்று வெளியில் வருவதுதான் யோக்கியர்க்கு அழகு. தேவையில்லாமல் ஆத்திரத்தின் அலை மோதலில் திராவிடர் கழகத் தலைவரைச் சீண்டுவது ஏன்? (பாவம்! ஆழம் தெரியாமல் காலை விட்டுப் பார்க்கிறார், புலி வாலை மிதிக்கப் பார்க்கிறார்.)

வீரமணியிடம் விவாதிக்கத் தயாரா என்ற கேள்விக்கு நெளிந்து வளைந்து ஏதேதோ வார்த்தைகளைப் போட்டுக் குதப்பி (அவர் பேட்டி . . பதிவு செய்யப்பட்டுள்ளது - நம்மிடம் உள்ளது.) கடைசி கடைசியாக ஆரோக்கிய மானதாக இருந்தால் தயார்தான். ஆனாலும் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய் விடுமே என்று அஞ்சுகிறாராம்.

நித்யானந்தா போன்றவர்களிடம் வாதிட திராவிடர் கழகத் தலைவரா வேண்டும்? தமிழ்நாட்டில் ஒரு தேதியையும் இடத்தையும் சொன்னால் திராவிடர் கழகத்தின் தொண்டர் ஒருவரை அனுப்பி வைக்கத் தயார்! தலைவர் வீரமணியின் பொதுவாழ்க்கை வயதுகூட உம் வயது கிடையாதே!

சங்கராச்சாரியார் போன்றவர்கள் விவாதத்துக்கு வந்தால் அப்போது வேண்டுமானால் திராவிடர் கழகத் தலைவர் நேரிடையாக விவாதிக்க வருவது பற்றி யோசிக்கலாம்.

கடைசியாக ஒன்று. நித்யானந்தா போன்ற காஷாய தாரிகள் அந்தராத்மாவோடு நேரடியாகப் பேசுபவர்கள் ஆயிற்றே!

(1) அத்தகையவர் எப்படி குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டு சிறைக்குள் தள்ளப்படுகின்றார்?

(2) தன்மீது வீண் பழி சுமத்தப்படுகிறது. பகவானே நீயே பார்த்துக் கொள் என்று சிவனே என்று இல்லாமல் எதற்காக வக்கீல்களைத் தேடுகிறார்? பத்திரிகையாளர் களுக்குப் பேட்டி கொடுக்கிறார்?

(3) ஏன் இமாச்சலப் பிரதேசத்துக்கு ஓடி ஒளிய வேண்டும்? (அங்குதான் கைது செய்யப்பட்டார்!)

(4) அப்படி என்றால் இவருக்கே, தான் நம்புவதாகக் கூறும் கடவுள் மீது உண்மையான நம்பிக்கை இல்லை என்று ஒப்புக் கொள்வாரா?

அய்ம்பொறிகளையும் மூடிக் கொண்டு ஒழுங்காக இருந்தால் வண்டவாளங்கள் எல்லாம் மறுபடி தண்ட வாளத்தில் ஏறவேண்டிய நிலை ஏற்பட்டு இருக்காதே!

பணத்திமிரும், பாலியல் உணர்வில் திகட்டிப் போகாத வாலிபக் கொழுப்பும், நாட்டு அரசியல் மாற்றங்களும் மறுபடியும் வாலாட்ட வைத்துள்ளது - விளைவு வட்டியும் முதலுமாகக் கிடைக்கப் போவதுதான் மிச்சம் - சட்டம் தன் கடமையைச் செய்யுமே!

மின்சாரம் 
http://viduthalai.in/page-8/30211.html 

Sunday, October 23, 2011

தீபாவளி கொண்டாடும் தமிழர்களே அசுரன் யார் என்று தெரியுமா?

திராவிடர்கள், வாழ்க்கை வசதிகள், பண்பாடுகள் நிறைந்த நாகரிக இனமாக வாழ்ந்து வந்தனர். கைபர், போலன் கண வாய் வழியாக ஆடு, மாடுகளை ஓட்டிக் கொண்டு ஆரியர் கூட்டம் பிழைப்புக்கு வழிதேடி வந்தனர். செழிப்பான திராவிட நாட்டைப் பார்த்து இங்கேயே தங்கி விட்டனர். ஆரியர்கள் யாகம் என்ற பெயரால் சோமபானம், சுரபானம் போன்ற மது வகைகளைக் குடித்தும், ஆடு, மாடு, மான், குதிரை முதலிய விலங்குகளைக் கொன்று தின்றும், காமக்களியாட்டங்களை நடத்தினர். புலால் உண்ணாமை, பண்பாடு, நாகரிகம் நிறைந்த திராவிடர்கள் யாகத்தைத் தடுத்தனர். ஆரியர்கள் திராவிட இனத்தாரில் சிலரை போதைப் பொருள்களையும் தங்கள் இனப் பெண்களையும் கொடுத்து வசப்படுத்த ஆரம்பித்தனர். ஆரிய இனப் பெண்களின் நிறத்தை யும், உடலையும் பார்த்து பலர் அவர் களின் வலையில் வீழ்ந்தனர். அந்த துரோகிகளை இந்திரர்கள் என்று கூறி, அவர்களின் துணை-யுடன், யாக எதிர்ப்பாளர்களைக் கொன்று யாகத்தை நடத்தினர். ஆரியர்கள் கூறிய வேதங்கள் என்பவை, யாக நடப்புகளையும் அவர் களுக்குக் கிடைத்த உதவிகளையும் தெரி விக்கின்றது. வேதங்களையும், கற்பனைக் கடவுள்களையும் சொன்னவர்கள் தேவர்கள் (சுரர்கள்) என்றும், வேதத்தை யும் கடவுள் வணக்கத்தையும் எதிர்த்த வர்கள் அசுரர்கள் என்றும் சொல்லப் பட்டுள்ளது. ரிக், அதர்வண வேதங்களில் யாகத்தைத் தடுக்கும் அசுரர்-களை அழிக்கும்படி இந்திரன், சோமன், அக்னி என்பவர்களைக் கோரும் மந்திரங்-கள் பலவும் உள்ளன. அவர்களால் கொலை செய்யப்பட்டதாக சாஸன், அகி, விருத் திரன், சம்பரன், சகவசு, திருபீகன் உரன், சுக்கனன், சுவசன், விபம்சன், பிய்ரு, நமுசி,ருதிக்கிரமன், அதிதிக்கவன், குதச்சணி, ஆபுதி, கிருணகரு என்ற பலம் பொருந்திய அசுரர்களின் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. மேலும் மேற்கண்ட அசுரர்களை அழித்த இந் திரன், சோமன், அக்னி முதலியவர்களை வணங்கி மேலும் அசுரர்களை அழிக் கும்படி வேண்டுகின்றனர். அதில் அசுரர் களின் மணிக்-கட்டை முறி, தோலைக் கிழி, முழங்-கால், முழங்கை, கழுத்துக்ளை முறி, கிழித்தெறி, சின்னா பின்னப்படுத்து, அக்னி சுவாலையால் சுடு, துண்டு துண் டாக வெட்டு, நீர்ப்பானையில் வைத்து வேகவை, பூமி விழுங்கட்டும், படு பாதாளத்தில் விழட்டும், மலை வெடித்து விழுங்கட்டும், நாசமாகட்டும், பசுவின்பால் அவர்களுக்கு நஞ்சாகட்டும், வாரிசு இல்லாமல் அழியட்டும், அவர்களது செல்வம், பசு முதலியவற்றை கொள்ளை-யடித்து எங்களுக்குக் கொடு என்று கேட்-கின்றனர். இவையனைத்தையும், தேவர்கள் குடி மயக்கத்தில்தான் செய்வர். அதனால் அவர்களுக்கு சோமரசத்தை திகட்டும் வரை கொடு என்கின்றனர். பின்னர் கற்பனையான இதிகாசங்களிலும் புராணங்களிலும் இந்த முறையே கடைப்பிடிக்கப்பட்டு திராவிடர்-களை அழித்ததாகக் கூறியுள்ளனர்.

அவற்றில் இரணியாட்சன், நரகாசுரன், கம்ஸன், சிசுபாலன், ஜராசந்தன், ராவணன், கும்பகர்ணன், இந்திரஜித்து, கவந்தன்; பெண்பாலர் தாடகை, சூர்ப்பனகை, சிம்மிகை என்ற திராவி டர்களின் பெயர்கள் வரு-கின்றன. அவர்களுக்கு உதவிய துரோகி-களை ஆழ்வார்கள் என்றுள்ளனர். திராவி டர்கள் பூர்வகுடிகள் என்பதை ரிக்வேதம் 2710 சுலோகத்தில் அசுரகுலத்தை, தாஸ இனத்தை, பழைமையாகவே தொன்று தொட்டு இங்கு வாழ்ந்து வருபவர்களை வேரோடு அழிக்கவும் என்றுள்ளது. திரா-விடர்களை வேதத்தில் அசுரர், அரக்கர், தஸ்யூ, தாஸர், சூத்திரன், தைத்ரியன், யதூ-தனர், பிசாசு, பூதம் என்று குறித்துள் ளனர். ஆயினும் பல இடங்களில் அசுரர் கள் வலிமை மிக்கவர்கள் யோக்கியர்கள் என்றுள்ளது.

அசுரர் என்பது காரணப் பெயரே. சுரன் என்றால் சுரபானம் (மது) அருந் துபவர். அசுரன் என்றால் மது அருந் தாதவர்கள். ஆரியர்கள் தங்கள் வழக்கப்படி நல்லவற்றை கெட்டவை என்றும், நல்லவர்களைக் கெட்டவர்கள் என்று நிலைநிறுத்த மக்களிடம் திரும்பத் திரும்பச் சொல்லி அவை வழக்கத்திற்கே வந்துவிட்டன. இந்த முறையில் மக்களின் மூளைக்கு விலங்-கிட்டும், பல மன்னர்களின் துணையாலும் புத்தர்கள், சமணர்கள் பலரைக் கொன்றும், யாக குண்டங்களில் இட்டுக் கொளுத்தியும், கழுவேற்றியும் அழித்தனர். அசுரர் என்பவர் வலிமை மிக்க, கொல்லாமை விரதம் பூண்ட, நல்லெண்ணம் கொண்ட நாகரிகம் மிக்க திராவிடர்களையே குறிக்கிறது. அது தவறாகக் கொள்ளப்பட்டு, மக்களை நம்பவைத்துள்ளனர். இந்த உண்மையை, தந்தை பெரியார் அவர்கள் மக்களுக்கு எடுத்-துரைத்து, புராண இதிகாசங்களில் சொல்லப்-பட்டு நமது மக்கள் கொண்டாடும் பண்டி-கை-கள் நமது இன முன்னோர்களை அழித்த நாள்களே என்பதால், அவற்றைக் கைவிட்டு மானமும் அறிவும் உள்ள மக்களாக வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்தப் பண்டிகைகளைக் கொண்டாடும் மக்கள் மானமும் அறிவும் இல்லாமல் தங்-களைத் தாங்களே இழிவுபடுத்திக் கொள்வதாகும்.

- விடுதலை, 27.10.2005

திராவிடர் - தமிழர் - தந்தை பெரியார்

ஆரியர் பழக்க வழக்கமும் அவர்களது மதம், கடவுள் ஆகியவைகளும் அவை பற்றிய யோக்கியத் தன்மை, சக்தி, நடப்பு முதலியவைகளும் தமிழர்களாகிய நமக்குப் பெரிதும் பொருத்த மற்றவை என்பது நமது கருத்தாகும்.

இதை மறந்து அவற்றுள் எதையாவது நமக்கு பொருத்த முள்ளதென்றும் அவை நம்முடையவையே ஒழிய ஆரியருடைய தல்ல வென்றும் நம் சைவப் பண்டிதர்களைப் போல் தமிழர் யாராவது ஆதாரத்தோடு வழக்காடுவார்களேயானால், அப்படி இருந்தாலும் அவை அந்த (அதாவது மக்கள் இன்றைய அறிவுபெறாத அந்த) காலத்தில், அதுவும் ஒரு சமயம் அன்று இருந்த மக்களுக்குப் பொருத்தமாயிருந்தாலும் இருக்கலாமே ஒழிய இந்தக் காலத்திற்கு அவை கண்டிப்பாய் ஒதுக்கித் தள்ள வேண்டியவைகளோயாகும் என்பதும் நமது அபிப்பிராயம்.

அதற்காக வேண்டியே, அதாவது அவைகளை நம் மக்கள் உணரவேண்டு மென்பதற்கு ஆகவே, அவைகள் பற்றிய ஆதாரங்களை ஆரியர்களாலும், ஆரியர்களின் கொள்கைகளுக்கும் அவர்களது மதம், கடவுள்களுக்கும் அடிமைப்பட்ட நம் பண்டிதர்களாலும், கற்பிக்கப்பட்ட ஆதாரங்களிலிருந்தே சில எடுத்து அடிக்கடி குடிஅரசுவில் எழுதி வரப்படுகிறது.

அந்தப்படி இவை சம்பந்தமாக குடிஅரசுவில் எழுதி வந்ததும் வருவதுமான சேதிகள் கண்டிப்பாக ஆரியர் களால் ஏற்படுத்தப்பட்ட வடமொழி ஆதாரங்களி லிருந்தும், அவைகளை ஆரியர்களாலேயே மொழி பெயர்க்கப்பட்டிருக்கும் மொழி பெயர்ப்புகளிலிருந்தும், மற்றும் அவற்றை நம் தமிழ்ப் பண்டிதர்களால் மொழி பெயர்த்தோ அல்லது ஆரியர் மொழிபெயர்த்ததைக் கவிகளாகப் பாடிய கவிகளிலிருந்தோ எடுத்துக் கையாளப்படுபவைகளேயல்லாமல் கற்பனையாக எந்தச் சங்கதியும் குறிப்பிடப்படுவதில்லை என்பதை மறுபடியும் வாசகர்களுக்கு உணர்த்துகிறோம்.

பொதுவாக ஆரிய நாகரிகத்தையோ அவர்களது பழக்க வழக்கங்களையோ பற்றி ஊன்றி ஆதாரங்களைக் கவனித்து சிந்தித்துப் பார்ப்போமானால் அவர்களுக் குள் ஒரு சமுதாயக் கட்டுப்பாட்டு முறையோ, ஒழுக்கமோ, நீதியோ, பகுத்தறிவு உணர்ச்சியோ ஏதும் இருந்ததாகக் காணப்படுவதற்கு இல்லை. அக்கால மானாபிமானத்துக்கும், இக்கால மானாபிமானத்துக்கும் சிறிதும் சம்பந்தமில்லை என்பதாகவும் தெரிகிறது. ஆகவே ஆரியர்கள் சகல துறைகளிலும் அக்காலத்திய ஆரியர் வாழ்வில் பூரண சுயேச்சையோடு எவ்விதக் கொள்கையும் இல்லாமல் அவரவர்கள் இச்சைப்படி விலங்குகள் போல் வாழ்ந்து வந்ததாகவே தெரிகிறது. அதனால்தான் வள்ளுவர்,

தேவரனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுகலான்

என்று பாடினார்போலும். (தேவர்-ஆரியர்)

நாளாவட்டத்தில் அவர்கள் இந்தக் கால தேச வர்த்தமானத்திற்குத் தகுந்தபடி எது மேன்மையாகக் கருதப்படுகிறதோ அதைத் தங்கள் பழக்கவழக்கங்களாக மாற்றி அமைத்துக் கொண்டு வந்து இன்றைய நிலைமைக்கு அவர்கள் வந்திருக்கக்கூடும் என்றாலும் வேத புராண இதிகாச காலங்களில் அவர்கள் மிருகப் பிராயத்தில் இருந்திருக்கிறார்கள் என்பதே அவற்றி-லிருந்து தெள்ளென விளங்குகின்றதாகும்.

நம் பண்டிதர்கள் பெரிதும் அவற்றை தங்கள் சமயத்திற்கும், தங்கள் கடவுள் நடப்புக்கும் பொருத்திக் கொண்டால் அந்தக் கேவலமான சேதிகளை வெறுக்க யோக்கியமற்றவர்களாகி மூடிவைத்துத் தொல்லை கொடுத்துக் கொண்டே வருகிறார்கள். அதனாலேயே அவை நம்மாலும் வெறுக்கப்படாமல் உயர் சமயமாகப் போய்விட்டதெனலாம்.
அந்தக் காலத்தில் கணவன் மனைவி என்கின்ற கூட்டு வாழ்க்கை ஒப்பந்தம் இன்று இருப்பதில் 100 இல் ஒரு பங்கு இருந்ததாகக்கூடத் தெரியவில்லை.

அந்தக் காலத்து நாணயம், ஒழுக்கம், நம்பிக்கை, நல்லெண்ணம், பிறநலம் பேணுதல் முதலிய நற்குணங் களும் இக்காலத்தவைகளுக்கு மிகமிக மாறுபட்டதும் தாழ்ந்ததுமாகவே இருந்து வந்திருக்கிறது.

அந்தக்கால ஆரியர்களுக்கு ஏதாவது ஒரு சமயம் இருந்திருப்பதாகக்கூடத் தெரியக் காணுவதில்லை. அவர்களுக்கு அப்போது ஏதாவது ஒரு கடவுளோ, பல கடவுள்களோ இருந்திருந்ததாகவும் தெரிய முடியவில்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் பஞ்ச பூதங் களையும், சூரிய சந்திரன் முதலியவைகளையும் மனி தனைப் போல் உருவகப்படுத்திக் கொண்டு தங்களுக்கு வேண்டியதை நல்கும்படி வேண்டிக்கொண்டு இருந் திருக்கின்றார்கள். அப்படி வேண்டியிருப்பதாலும் ஒரு கவனிக்கத்தக்க சமயமென்ன வென்றால், தங்களுடைய ஒழுக்க ஈனங்களையும் மோசடிகளையும் அவைகளுக்கும் கற்பித்து இருக்கின்றார்கள்.

ஆரியர்களின் முதல் ஆதாரம் வேதம் என்பதாகத் தான் தெரிகிறது. அந்த வேதம் பெரிதும் விபசாரம், மது, மாம்சம் அருந்துதல், தாங்கள் அல்லாதவர்களை (ஆரியரல்லாதவர்கள்) இழிவாய் பேசுவதும், அவர்களை அடியோடு அழிக்கவும், தங்களுக்கு ஏவலாகக் கொள்ளவும், பழிவாங்கும் தன்மைபோல் கொடுமை செய்வதும் ஆன காரியங்களையே கொள்கையாகவும், பிரார்த்தனையாகவும் கொண்டிருக்கிறார்கள்.

வேதத்திலும் அதன்பின் ஏற்பட்ட வேதசாரமான புராணக் கதை, காவிய இதிகாசங்களிலும் பார்த்தால் தகப்பன்- மகள், அண்ணன்- தங்கை என்கின்ற பேத முறைகூட இல்லாமலும், மிருகம்- மக்கள் என்கின்ற இன பேதம்கூட இல்லாமலும், ஆணும் ஆணுமாகவும் இன்னமும் எத்தனையோ விதமாக இயற்கைக்கு விரோதமாக சேர்க்கையுடன் இருந்து வந்திருப்பதாகப் பல இடங்களில் காணப்படுகின்றன.

இவைகளையெல்லாம், ஏதோ காட்டுமிராண்டி காலத்துக் கொள்கை என்றும், எந்த சமூகத்திலும் மனிதன் மிருகப் பிராயத்தில் இருந்த காலத்தில் இப்படித்தான் இருந்திருக்க முடியும் என்றும், ஒரு விதத்தில் சமாதானம் செய்து கொள்ளலாம் என்றாலும், மேற்கண்ட விஷயங் களைக் கொண்ட ஆதாரங்களை இன்று ஆரியரும், தமிழரும், தங்கள் தங்கள் சமய ஆதாரங்கள் என்றும் தங்களால் போற்றிப் பாராட்டிப் பாதுகாக்க வேண்டிய புண்ணிய சரித்திரங்கள், புண்ணிய காரியங்களில் என்றும் பிரசங்கித்துப் பிரச்சாரம் செய்கின்றார்களே இதற்கு என்ன சமாதானம் என்பது நமக்கு விளங்கவில்லை.

சிவன், விஷ்ணு, பிரம்மா, சுப்பிரமணியன், இராமன் கிருஷ்ணன் முதலிய கடவுள்களைப் பற்றிப் பிறகு யோசிப்போம். அக்கினி, வாயு, வருணன் முதலிய பஞ்சபூதக் கடவுள்களைப் பற்றியும் பிறகு யோசிப்போம். இந்திரன் என்கின்ற கடவுளைப் பற்றி ஆரியர் கள்தானாகட்டும், தமிழர்கள் தானாகட்டும், அக் கடவுள்களின் கதைகளையும், பண்டிகைகளையும் எதற்கு ஆக கொண்டாட வேண்டும் என்று கேட் கின்றோம்.

இந்திர விழா சிலப்பதிகாரத்திலேயே கொண்டாடப் பட்டிருக்கிறது. இதிலிருந்து ஆரியர்கள் தவிர தமிழர்களும் ஆதி காலத்தில் இருந்தே இந்திர விழாவைக் கொண்டாடி இருக்கின்றார்கள் என்றும் ஆதிகாலத்திலிருந்தே தமிழர்கள் தன்மானமிழந்து ஆரியர்களுக்கு அடிமைப்பட்டு வந்திருக்கின்றார்கள் என்றும் தெரியவருகிறது. பழந்தமிழ் அரசர்கள் என்று சொல்லி உரிமை கொண்டாடப்படுபவர்களான மூவேந்தர் (சேர சோழ பாண்டியர்) எவருமே உண்மைத் தமிழனாக இருந்ததாகச் சொல்லுவதற்கு ஆதாரமே காண முடியவில்லை.

இன்றைய அரசியல் உலகத்தில் ஒரு முத்துரங்க முதலியாரும், பண்டிதர்கள் உலகத்தில் ஒரு கதிரேசன் செட்டியாரும், கலைவாணர்கள் உலகத்தில் ஒரு சிதம்பரநாத முதலியாரும், ஆகிய பெரியோர்கள் இன்று எப்படித் தமிழர்களாக இருந்து வருகிறார் களோ அப்படித்தான் பழங்கால தமிழர்கள் உலகத்திலும் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தமிழர்களாக இருந்திருக்கிறார்களே ஒழிய இன்று தமிழர் களின் உள்ளத்தில் உதித்தெழுந்த உணர்ச்சிப்படி யான தமிழன் ஒருவனைக் கூட அக்காலத்தில் இருந்ததாகக் காணமுடியவே இல்லை.

தமிழர்களுக்கு ஆரியர்வேதம், கடவுள், சமயாதாரம் ஆகியவை தவிர்த்த தனித்தமிழ்க் கொள்கையோ முறையோ இருந்தும் இருந்ததாகச் சொல்லியும் ஆராய்ச்சியாளர்களுக்கு இடமில்லாமலே நம் இன்றைய தமிழ்ப் பண்டிதர்களும், பழங்காலப் பண்டிதர்களும் இன்றைய அரசர்களும் பழந்தமிழ் அரசர்களும் செய்து விட்டார்கள்.
பெரிய புராணத்தையும், பக்த சீலாமிர்தத்தையும், கந்தப் புராணத்தையும் கட்டிக்கொண்டு அழும் தமிழன் எவனாகட்டும் அவன் தனித்தமிழர் கொள்கைக்காக இதுவென எதையாவது காட்ட முடியுமா? என்றும் இப்படிப்பட்ட தமிழன் யாராய் இருந்தாலும் அவன் பண்டார சன்னிதியாயிருந்தாலும் அவன் நாஸ்தி கனல்லாமல் அதுவும் முழு முழு நாஸ்திகனே யல்லாமல் கடுகளவு நாஸ்திகனாகவாகிலும் இருக்க முடியுமா என்று யோசித்துப் பாருங்கள்.

அன்பே கடவுள், உண்மையே கடவுள், ஒழுக்கமே கடவுள், ஒப்பு நோக்கே (சமரசமே) கடவுள் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு தமிழ் ஆஸ்திகன் மேற் கண்ட பெரிய புராணாதிகளையும் அவற்றில் வரும் கடவுளர் களையும், அவர்களது செய்கைகளையும் பாராட்டி வழிபடுகிறவனாக இருந்தால் அவன் எப்படி தமிழ் ஆஸ்திகனாவான் என்று கேட்கிறோம்.

தமிழனுக்கு உச்சிக்குடுமி எப்படி வந்தது? தீக்கை எங்கிருந்து வந்தது? பஞ்சாட்சரமேது? முத்திரஸ் தானம், (சமாரட்சனம்) ஏது? அஷ்டாட்சரம் ஏது? பஞ்சகச்சம், திருநீறு, திருநாமம் பூச்சுக்கள் ஏது? என்பன போன்ற எத்தனையோ விஷயங்களை கவனித் தால் உண்மைத் தமிழன் எவனாவது இருக்கிறானா என் பதும் விளங்காமல் போகாது.

தமிழனென்று தன்னை சொல்லிக் கொள்ள வேண்டுமென்றும் தமிழனுக்கு என்று தனிக் கொள்கைகள் அடையாளங்கள் ஒன்றும் இருக்க வேண் டியதில்லை என்றும் கருதிக் கொண்டு தமிழனெனில் பெரியவனாகத் தன்னைக் கருதவேண்டும் என்றிருப் பவர்கள் நம்மீது கோபித்துத்தான் தீருவார்கள். அதற்கு நாம் என்ன செய்யலாம். இவர் கோபத்தை விட அதனால் ஏற்படும் கேட்டைவிட தமிழர்களின் மானம் பெரிது என்று எண்ணுவதால் இவர்கள் கோபத்தால் வந்தது வரட்டும் என்கின்ற துணிவு கொள்ள வேண்டி இருக்கிறது.
(குடிஅரசு, 13.11.1948)

தீபாவளி என்றால் என்ன? தந்தை பெரியார்

புராணம் கூறுவது

1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.

2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்துக் கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.

3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.

4. ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.

5. அதன் பயனாக பூமி கர்ப்பமுற்று நரகாசுரன் என்ற பிள்ளையையும் பெற்றது.

6. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.

7. தேவர்களுக்காக விஷ்ணு நரகாசுர டனுடன் போர் துவங்கினார்.

8. விஷ்ணுவால் அவனைக் கொல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகா சுரனுடன் போர்தொடுத்து அவனைக் கொன்றாள்.

9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந் தார்கள்.

10. இந்த மகிழ்ச்சி (நரகாசுரன் இறந்த தற்காக) நரகாசுரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்.

இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்!

இந்த 10 விஷயங்கள்தான் தமிழரை தீபாவளி கொண்டாடும்படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா? இதை ஆராய்வோம். இக்கதை எழுதிய ஆரியர் களுக்குப் பூமிநூல்கூடத் தெரியவில்லை என்று தானே கருத வேண்டியிருக்கிறது.

பூமி தட்டையா? உருண்டையா?

தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவ னால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா? எங்கு நின்றுகொண்டு சுருட்டுவது?

சுருட்டினால் தூக்கி கட்கத்திலோ, தலைமீதோ எடுத்துப் போக முடியுமா?

எங்கிருந்து தூக்குவது?
கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன்மீது இருந்திருக்கும்?

விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்கவேண்டிய அவசியம் என்ன?

அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால், பூமிக்கு பன்றிமீது காதல் ஏற்படுவானேன்?

பூமி மனித உருவமா? மிருக உருவமா?

மனித உருவுக்கும், மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா?

பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்?

இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்?

இவைகளைக் கொஞ்சமாவது தீபாவளி கொண்டாடும் - தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள் சிந்திக்கவேண்டாமா? நரகாசுரன் ஊர் மாகிஷ்மகி என்ற நகரம். இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகித்ஜோஷா என்று சொல்லப்படுகிறது. இது வங்காளத்தில் விசாம் மகாணத்து அருகில் இருக்கிறது. இதை திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள்.

வங்காளத்தில் தேவர்களும், அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்? இவை ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும், சொல்கிறான் என்பதற்காகவும் நடுஜாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத்துணி உடுத்து வதும், பட்டாசு சுடுவதும், அந்தப் பார்ப்பனர்கள் வந்து பார்த்து கங்கா ஸ்நானம் ஆயிற்றா? என்று கேட்பதும், நாம் ஆமாம் என்று சொல்லி கும்பிட்டுக் காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவ தும் என்றால் இதை என்னவென்று சொல்வது?

சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!

பார்ப்பனர்களே உங்கள் ஆசிரியர்களுக்கு மானம், புத்தி இல்லாவிட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள். எதற்காக இவ்வளவு சொல்லு கிறேன் என்றால், இக்கதை எழுதின காலத்தில் பார்ப்பனர்கள் (ஆரியர்) எவ்வளவு காட்டு மிராண்டிகளாக இருந்திருக்கவேண்டும். அந்தக் காலத்தில் நாம் மோசம் போனது ஈன நிலை அடைந்தது ஏன்? என்பதை தமிழன் ஒவ்வொருவரும் நன்கு சிந்திக்க வேண்டும் என்பதற்காகவேயாகும்.

Monday, September 26, 2011

திராவிடர் என்பது - ஏன்?

தலைவர் அவர்களே! மாணவர்களே!

இவ்வூர் திராவிடர் கழகத்தின் சார்பாக நான் பேச வேண்டுமென்று சில மாணவர்களால் விரும்பப்பட்டேன்; அதுபற்றி மகிழ்ச்சியோடு பேச ஒருப்பட்டேன். எனினும் என்ன பேசுவது என்பது பற்றி நான் இதுவரைகூடச் சிந்திக்கவில்லை. மாணவர்களாகிய உங்களைப் பார்த்தால் நீங்கள் பெரிதும் 15 வயது 18 வயது உடையவர்களாகவே காண்கிறீர்கள்; உங்களுக்குப் பயன்படத்தக்கதும் பொருத்தமானதுமாக பேச வேண்டுமென்றால் மிகவும் கவனத்தோடு பேச வேண்டியிருக்கிறது.
ஆனால் படிக்கும் சிறு குழந்தைகளுக்குப் பாடப் படிப்பைத் தவிர, வேறு பேச்சு என்னத்திற்கு? என்ற காலம் மலையேறிவிட்டது. ஏனெனில், படிப்பே மோசமானதாக இருப்பதால் அப்படிப்பைத் திருத்துவதற்கு ஆவது உங்களி டத்தில் உணர்ச்சி தோன்ற வேறு பேச்சு அவசியமாகி விட்டது.

உங்கள் படிப்பின் தன்மை

முதலாவது உங்கள் படிப்புக்கு லட்சியமே இல்லை, லட்சியமற்ற படிப்பு என்பது ஒருபுறம் இருந்தாலும், என்ன படிப்புப் படிப்பது என்பது பள்ளிக்கூடத்தாருக்கும், ஆசிரியர்களுக்கும்கூட சம்பந்தமற்றதாகும்; இதனால் இப்படிப்பினால் ஏற்படும் பயன் என்ன என்றாலோ அதுவும் தானாக ஏதாவது ஏற்பட்டால் அதுதான் பயனே ஒழிய மற்றபடி நிச்சயமான பயன் என்ன ஏற்படும் என்று கருது வதற்கில்லை. படிப்பது என்பது வெறும் பேச்சளவிற்கு அறிவுக்காக, அறிவு விருத்திக்காக என்று சொல்லப் படுகிறது. ஆனால், படித்தவர்களுக்கு அறிவு விருத்தியாகிறதா? படித்தவர்கள் அறிவாளிகளாக இருக்கிறார்களா என்றால், ஆம் என்று சொல்ல முடிவதில்லை. இந்த அறிவு என்பது கூட ஒரு பொது அருத்தத்திற்குக் கட்டுப்பட்டதாய் இல்லாமல் எதைப் படித்தானோ அதில் அறிவுள்ளவர்கள் என்றுதான் சொல்லக் கூடியதாய் இருக்கிறது. அந்தக் குறிப்பிட்ட படிப்பில் அதாவது படித்த படிப்பில்; அறிவு ஆவது சரியாக இருக்கிறதா என்றால் அதுகூடச் சரியாக இல்லாமல் ஒன்றுக்கொன்று முரணான அறிவு ஏற்படும் படியாக இரண்டு கருத்துள்ள அதாவது முரண் கருத்துள்ள படிப்பேதான் கொடுக்கப்படுகின்றது. எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் மாணவர்களுக்கு அறிவுப் படிப்பும், மூடநம்பிக்கைப் படிப்பும் இரண்டும் கொண்டவர்களுமாகி விடுகிறார்கள். மாணவர்கள் மாத்திரமல்லாமல் படிப்பை முடித்த பெரியவர்களும், உபாத்தியாயர்களுங்கூட மூட நம்பிக்கையுடையவர்களாகவே இருக்க வேண்டியவர் களாகிறார்கள். உதாரணமாக, சரித்திரம், பூகோளம், விஞ்ஞானம், வான சாஸ்திரம், உடற்கூறு, உலோக விஷயம் முதலியவைகளில் படித்துத் தேறியவர்களில் யாருக்காவது இது சம்பந்தமான மூடநம்பிக்கைக் கொள்கை இல்லாத சரியான அறிவு இருக்கிறது என்று சொல்லமுடியுமா? சரித்திரம் படித்தவன் இராமாயண பாரதம் முதலிய புராணக் கதையும், சரித்திரத்தில் சேர்த்துப் படித்து, ராமனும் பரதனும் இந்த நாட்டை ஆண்டான் என்றும், அது இன்ன காலம் என்றும், இந்த நாட்டுக்குப் பாரததேசம் என்பது பெயர் என்றும் கருதிக்கொண்டு அனுபவத்திலும் அதற்கு ஏற்றவண்ணம் நடந்து பாரதமாதாவை வணங்கிக் கொண்டு திரிகிறான். நிஜமாக நடந்த சரித்திர உண்மைகள் நிஜமான நபர்கள் அதன் காலங்கள் ஆகியவை சரித்திரம் படித்தவர்கள் என்பவர்களுக்கு சரியாகத் தெரிவதில்லை.

நடவாததும், நடந்ததாக நம்ப முடியாததும், அதற்கும் காலம் நிர்ணயிக்க முடியாததுமான அறிவுக்குப் பொருந்தாத காரியங்களுக்கு அதிக விபரம் தெரிகிறது. ஆனால் நடந்தவைகளுக்குச் சரியான விபரம் தெரிவதில்லை. சேர, சோழ, பாண்டியர், நாயக்கர் ஆகிய வர்களும், அவர்களது வாரிசு, அண்ணன் தம்பிகளும், மனைவி மக்களும் ஆண்ட நாட்டெல்லைகளும், முறை களும், முடிவுகளும் சரித்திரம் படித்த 100க்கு 90 மாண வர்களுக்கு விவரம் சொல்லத் தெரியாது. தசரதனுக்கும், ராமனுக்கும், கிருஷ்ணனுக்கும், பாண்டவருக்கும், துரியோதனாதிகளுக்கும், இரணியனுக்கும், பலிச் சக்கர வர்த்திக்கும், மனுநீதி கண்ட சோழனுக்கும் அண்ணன் தம்பிமார்கள், மனைவி மக்கள், அவர்கள் கணவர்கள் இவ்வளவு என்று 100க்கு 90 மாணவர்களுக்குத் தெரியும். பூகோளம் படித்தவனுக்கு உலகப் பரப்பு, அதன் பிரிவுகள் சரியாக ஞாபகத்தில் இராது. ஆனால் இல்லாததும் இருக்க முடியாததுமான மேல் ஏழுலோகம், கீழ் ஏழுலோகம், அதன் வர்ணனை பலன், தன்மை இருப்பதாக முழு ஞாபகமாகத் தெரியும், ஞானசாஸ்திரம் படித்தவனுக்கு சூரியன், சந்திரனின் உண்மைத் தன்மை, கிரகணங்களின் உண்மைத்தனம் இயக்கம், அதன் சீதோஷ்ண நிலைமைக்குக் காரணம் ஆகியவை சரியாகத் தெரியாது. ஆனால் சூரியனுக்கு 16 குதிரை, சந்திரனுக்குக் கலை வளரவும் தேயவும், சாபம் இவர்களது மனைவி மக்கள், அவர்களது விபசாரம், ராகு கேது விழுங்குதல். அதனால் கிரகணம், அதற்குப் பரிகாரம் என்பது போல கற்பனைக் கதைகள் யாவருக்கும் உண்மை யென்ற காரணமும், அதை அனுசரித்த அனுபவமும், அதற்கு ஏற்ப நடப்பும் தெரியும். விஞ்ஞானத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. உதாரணம், விஞ்ஞானப் படிப்பின் இன்றைய நிபுணர்களைப் பார்த்தாலே விஞ்ஞானப் படிப்பின் தன்மையும், பலனும் நன்றாய் விளங்கும். இப்படியாகப் படிப்புக்கும், அறிவுக்கும், பெரும்பாலும் உண்மைக்கும், நடப்புக்கும் சம் பந்தமில்லாத மாதிரியான படிப்புத்தான் இன்று பள்ளிப் படிப்பாகப் போய்விட்டது.

படிப்பால் ஏற்படும் பயன்

இது தவிர, இனிப் படிப்பினால் ஏதாவது ஒழுக்கம், நாட்டுப்பற்று, இனப்பற்று, சமரச ஞானம் முதலியவை ஏதாவது ஏற்படுகிறதா? அல்லது படித்த மக்களிடம் இவை ஏதாவது இருந்து வருகிறதா? என்றால் அதுவும் சிறிதும் சரியானபடி இல்லாமல் வெறும் கற்பனைக் குணங்களும், பற்றுகளுந்தான் பெரிதும் காணப்படுகின்றனவே தவிர உண்மையானதும், இருக்க வேண்டியதுமானவைகள் அருமையாகவே இருக்கின்றன. இதை விரிக்கில் மிகமிக நீளும். ஆகவே, இம்மாதிரி படிப்பைப் படிக்கின்ற பிள்ளைகள் எவ்வளவு சிறிய பிள்ளைகளானாலும் இவைகளைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள் என்று உங்களுக்கு சொல்லுவதால் கேடு எதுவும் எற்பட்டுவிடும் என்று நான் கருதவில்லை.

ஆசிரியருடன் விவாதம் புரியுங்கள்

உங்களுக்கு உபாத்தியாயர்கள் இப்படிப்பட்ட படிப்பைக் கற்றுக் கொடுக்கும்போது இந்தமாதிரியான காரியங்களைப் பற்றிச் சிந்தித்து, நீங்கள் இது சரியா என்று கேட்பதன்மூலம் உங்கள் ஆசிரியர்களால் உண்மை அறிவிக்கப்படுவீர்கள். பரீட்சையில் பாசாவதற்கு நீங்கள் படித்ததையும், சொல்லிக் கொடுத்ததையும், எழுதினாலும் உங்கள் அறிவுக்கும், அனுபவத்திற்கும் எது உண்மை என்பதாவது விளங்கக்கூடும். ஆதலால் முரண் வந்த இடங்களில் விளக்கம் விரும் புங்கள். கட்டுப்பாடாகவும் அதிகப்படியாகவும் மாணவர் கள் விளக்கம் பெற விரும்புவீர்களானால் ஆசிரியர்களும் உங்களுக்கு விளக்கம் சொல்லவாகிலும் பயன்படும்படி அறிவு பெறுவார்கள். இப்படிப்பட்ட விளக்கம் தெரிந்த ஆசிரியர்கள் பெருகுவார்களானால் மக்களுக்குப் படிப்பதால் ஏற்படும் கடமையாவது காலப்போக்கில் குறையும் என்று கருதுகின்றேன். இதை ஏன் உங்களிடம் சொல்லுகிறேன் என்றால் இதுவரை கல்வி இலாகாக்காரர்கள் இந்தக் குறை பாட்டைப் பற்றி சரியானபடி சிந்தை செலுத்தவே இல்லை. படிப்பவர்களுக்கு இரட்டை மனப்பான்மை அதாவது சரி யானதும், போலியும் கற்பனையுமானதுமான ஆகிய இரு முரண்பட்ட மனப்பான்மை உண்டாகும்படியாகவே கல்வியால் செய்யப்பட்டு வந்திருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுவதற்கு ஆகத்தான். எனவே இதுவரை உங்களுக்கு படிப்பைப்பற்றி சில கூறினேன்.

திராவிடர் கழகம் ஏன்? இனி உங்கள் கழகத்தைப் பற்றிச் சில கூற ஆசைப்படு கிறேன். திராவிடர் மாணவர் கழகம் என்பதில் திராவிடர் என்கின்ற பெயர் ஏன் வைக்கவேண்டியதாயிற்று? இத்தனை நாள் இல்லாமல் இப்போது ஏன் எங்கு பார்த்தாலும் திராவிடர் திராவிடர் என்று சொல்லப்படுகிறது. இதுவரை இருந்துவருகிற பிரிவுகள், பேதங்கள் ஆகியவைகள் போதாமல் இது வேறு ஒரு புதிய பிரிவா? என்றெல்லாம் நீங்கள் கேட்கப்படலாம். அவற்றிற்கு உங் களுக்கு விடை சொல்லத் தெரியவேண்டும். அதை நீங்கள் தெரிந்து கொள்ளாவிட்டால் திராவிடர்களின் எதிரிகள் இந்தத் திராவிடம் என்பது ஒரு புதுப் பிரிவினையை உண்டாக்கக் கூடியது என்றும், இது மக்களுக்குள் துவேஷத்தையும், பேதத்தையும் உண்டாக்கக் கூடியதென்றும் சொல்லி திராவிட மக்களின் மேம்பாடு முன்னேற்ற உணர்ச்சியையும், முயற்சி யையும் கெடுக்கப் பார்ப்பார்கள்.

இதுவே எதிரிகளின் வழக்கம். திராவிடம் - திராவிடர் என்பது திராவிடம் என்றும், திராவிடர் என்றும் சொல்லுவது நாமாக ஏற்படுத்திய புதிய கற்பனைச் சொற்கள் அல்ல. இது நம் நாட்டிற்கும், நம் மக்களுக்கும் குறிப்பிடும் ஒரு சரித்திர சம்பந்தமான பெயர்களாகும். இவை பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே வழங்கி வரும் பெயர்களு மாகும். உங்களுக்கு நன்றாய் இந்த உண்மை விளங்க வேண்டுமானால் நீங்கள் உங்கள் பள்ளியில் இன்று படிக்கும் இந்த நாட்டு (இந்துதேச) சரித்திரப் புத்தகத்தைப் புரட்டிப் பாருங்கள். அதில் எந்த சரித்திரப் புத்தகத்தை எடுத்துக் கொண்டாலும் அதன் விஷய முதல் பக்கத்தில் திராவிடம், திராவிடர் என்கின்ற தலைப்புக்கொடுத்து அவற்றின் வரலாறுகள் எழுதப்பட்டிருக்கும். இவை முடிந்த அடுத்த பக்கத்தைத் திருப்பினீர்களானால் அதில் ஆரியம், ஆரியர் என்கின்ற தலைப்பு கொடுத்து சரியாகவோ தப்பாகவோ அவற்றின் வரலாறுகள் எழுதப்பட்டிருக்கும். எனவே இவை அதாவது திராவிடர், ஆரியர் என்பவை உங்கள் குழந்தைப் பருவத்தில் பள்ளிப்படிப்பில் உங்களுக்கு ஊட்டப்பட்ட சேதிகளும், வெகு காலத்திற்கு முன் ஏற்பட்ட உண்மைகளும் ஆராய்ச்சிச் சுவடிகளில் காணப்படும் சேதிகளுந்தானே ஒழிய இன்று புதிதாக நானோ மற்றும் வேறு யாரோ கொண்டு வந்து புகுத்தியது அல்ல. இதுவேதான் இந்நாட்டுச் சரித்திரத்தின் ஹ,க்ஷ,ஊ ஆகும். இதிலிருந்து பார்த்தாலே நம்முடையவும் நம் நாட்டினுடையவும் தன்மைகள் ஒருவாறு நமக்கு விளங்கிக் கொள்ள முடியும் என்பதற்கு ஆகவே அதை ஞாபகப்படுத்தும் படியான மாதிரியில் அனுபவத்தில் வழக்கத்திற்கு நினை வுக்கு வரும்படி செய்ய இன்று அதைப்பற்றிச் (திராவிடத்தை பற்றி) சிறிது அதிகமாய் உங்களிடம் பேச வேண்டி இருக்கிறது. இதுகூட ஏன்? இதுகூட ஏன்? இன்று புதிதாகச் சொல்லப்படவேண்டும் என்று கேட்கப்படலாம். எத்தனையோ ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இருந்தே இருந்துவருகிற திராவிடர் ஆரியர் என்கின்ற வார்த்தையை நாம் இன்று அமலுக்கு - பழக்கத்திற்கு அதிகமாய்க் கொண்டுவருவதால் அந்தக்கால நிலைக்கு நாம் போகவேண்டும் என்கின்ற கருத்து அதில் இருப்பதாக யாரும் கருதிவிடக்கூடாது. பிற்போக்குக்கு ஆக நாம் அப்படிச் சொல்லவில்லை. நமக்குச் சிறு பிராயத்தில் சரித்திர மூலம் படிப்பிக்கப்பட்டிருந்தும் அனுபவத்தில், உணர்ச்சியில் ஏன் நம் மக்களுக்குள் நினைவிலிருக்க முடியாமல் போய்விட்டது என்று நாம் ஒருவரை ஒருவர் கேட்டுக் கொள்ள வேண்டுமே ஒழிய, ஏன் நமக்கு இப்போது ஞாபகப்படுத்தப்படுகிறது என்ற கேள்விக்கு இடமே இல்லை. ஆனாலும் ஏன் என்றால், ஏற்பட்ட கெடுதி அதாவது, திராவிடர் என்ற நினைவில்லாததால் நமக்கு என்ன கெடுதி ஏற்பட்டது என்று கேட்டால் அந்த நினைவு நமக்கு இல்லாததால்தான் நாம் 4 ஆம் , 5 ஆம் ஜாதியாய், சமுதாயத்திலும், தற்குறிகளாய்க் கல்வியிலும், கூலிகளாய்த் தொழிலும், ஏழைகளாய் வாழ்க்கையிலும் அந்நிய ஆதிக்கத்திற்கு உட்பட்டவர் களாய் அரசியல், ஆத்மார்த்த இயல் என்பவற்றிலும் காட்டுமிராண்டி காலத்து மக்களாய் அறிவு, கலாச் சாரம், தன்மானம் ஆகியவைகளிலும் இருந்து வருகி றோம். இது இன்று நேற்றல்லாமல் நம்மைத் திராவிடர் என்பதையும் நம்நாடு திராவிடநாடு என்பதையும் மறந்த காலம் முதல் அதாவது சுமார் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே இருந்துவருகிறோம். நாம் நம்மைத் திராவிடர் என்று கருதினால், நினை வுறுத்திக்கொண்டால் உலக நிலையில் திராவிடர் (நம்) நிலை என்ன? தன்மை என்ன? நாம் எப்படி இருக்கிறோம்? என்பது உடனே தென் படும் ஏன் எனில், நாம் எப்படி இருக்க வேண்டியவர்கள்?

நாம் முன் கூறின இழிநிலையும் குறைபாடுகளும் இந்த நாட்டில், ஏன் உலகிலேயே திராவிடர்களுக்குத்தான் (நமக் குத்தான்) இருக்கிறதே தவிர திராவிடரல்லாதவர்களுக்கு இல்லவே இல்லை. திராவிடமல்லாத வேறு நாட்டிலும் இல்லை. இந்நாட்டு மனித சமுதாயத்தில் ஒருகூட்டம் அதாவது, ஆரியர்கள் பிறவி உயர்வாயும், பிறவி காரணமாய் உயர்வாழ்வாயும், மற்றொரு சமுதாயம் அதாவது, நாம் - திராவிடர் பிறவி இழி மக்களாயும், பிறவி காரணமாய்த் தாழ்ந்த இழிந்த வாழ்வாயும் இருப்பது இதுவரை மக்களுக்குத் தென்படாததும், தென்பட்டாலும் அதைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய அவசியமில்லாமலும், சிந்தித்தாலும் முயற்சி செய்யாமலும், முயற்சி செய்தாலும் வெற்றி பெறாமலும் போனதற்கு காரணம் என்ன? என்பதைச் சிந்தியுங்கள். நீங்கள் உங்களைத் திராவிடர்கள் என்று கருதாததினால், நினைவுறுத்திக் கொள்ளாததால் இன்றைய இழிவுக்கும், தாழ்மைக்கும், கீழ்நிலைமைக்கும் உரியவர்கள் என்று உங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டி ஏற்பட்டுவிட்டது. அக்கட்டுப்பாட்டை உடைக்க நீங்கள் திராவிடர்கள் என்று கருதி முயலாமல் அந்தக் கட்டுப்பாட்டிலிருந்து விலக ஆசைப்பட்டதால்தான் அக்கட்டு உங்கள் ஆசையை அனுமதிக்கவில்லை. இதுவரையில் இழிநிலை கட்டுப்பாட்டிலிருந்து தப்ப, மீள முயன்றவர்கள் நம்மில் எவர்களாவது இருப்பார்களானால் அவர்கள் அத்தனைபேரும் தோல்வி அடைந்து பழைய நிலையிலேயே இருப்பதற்குக் காரணம் இதுவேயாகும். சிறைச்சாலைக்குள் இருப்பவன் எந்த வழியில் சிறைக்குள் சென்றானோ அந்தவழியில் வெளிவர முயல வேண்டுமே ஒழிய சிறைக் கதவை, பூட்டை கவனியாமல் அது திறக்கப்படவும், உடைக்கப்படவும் முயலாமல் வெறும் சுவரில் முட்டிக்கொள்வதால் எப்படி வெளிவர முடியும்? திராவிடன் இழிவு, தாழ்வு என்னும் சிறைக்குள் சிக் குண்டதற்குக் காரணம் அவன் தன்னைத் திராவிடன் என்று உணராமல் ஆரியன் வசப்பட்டு ஆரியத்திற்கு, ஆரிய மதம், கலை, ஆச்சார அனுஷ்டானங்களுக்கு அடிமைப்பட்டதல்லாமல் வேறு என்ன காரணம் சொல்ல முடியும்? ஆரியத்தின் பயனாய் ஏற்பட்ட சிறைக் கூடத்தில், கட்டுப்பாட்டின் கொடுமையில் இருந்து வெளிவர விரும்புகிறவன் கையிலும், காலிலும் பூட்டியிருக்கும் ஆரிய பூட்டையும் விலங்கையும் தகர்த்தெறியச் சம்மதிக்க வேண்டாமா? அவைகளைத் தகர்த்தெறியாமல் எப்படி வெளிவர முடியும்? விலங்கோடு வெளிவந்தால்தான் பயன் என்ன? ஆகவேதான் ஆரியக்கொடுமை, ஆரியக் கட்டுப் பாட்டால் நமக்கு ஏற்பட்ட இழிவு நீங்க நாம் ஆரியத்தை உதறித்தள்ள வேண்டும். ஆரியத்தை உதறித்தள்ளுவதற்குத் தான் நம்மை நாம் திராவிடர் என்று சொல்லிக்கொள்ளுவ தாகும். அதற்குத் தூண்டுகோல்தான் திராவிடர் என்பது.

எப்படி ஒருவன் பறையனாய், சக்கிலியாய் இருப்பவன், அவன் இஸ்லாம் என்றாகிவிட்டால் அந்தப் பறத் தன்மை, சக்கிலித் தன்மை உடனே ஒழிந்துபோகிறதோ அதேபோல் அறியாமையால் ஆரியத்தில் சிக்குண்டு கீழ் மகனான மக்கள் தங்களைத் திராவிடர்கள் என்று சொல்லிக்கொண்டாலே சரிசமமான மக்களாக ஆகிவிடுகிறார்கள். அதாவது எல்லா மேன்மைக்கும் முன்னேற்றத்திற்கும் உரிமையும் சமபங்கு முள்ள சுதந்திர மக்களாக ஆகிவிடுகிறார்கள். அப்படிக் கில்லாமல் தன்னை ஆரியத்தோடு பிணைத்துக்கொண்டு இருக்கிற எந்தத் திராவிடனும் கீழ்மகன் என்ற தன்மையை ஒப்புக் கொண்டவனேயாவான். எவ்வளவு முயற்சி செய்தாலும் மீள முடியாதவனே ஆவான். உதாரணமாக தோழர் சர்.ஆர்.கே. சண்முகம் செட்டியார் தன்னை இந்து என்று சொல்லிக்கொள்ளுவதன் மூலம் எவ்வளவு பெரிய ஜாதி வைசியரானாலும், பிராமணனுக்கு கீழ் ஜாதி என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதுதான் இன்றைய அனுபவம். இதுதான் இதுவரை யார் பாடுபட்டும் வெற்றிபெறாத காரணம். இதைக் கண்டிப்பாய் உணருங்கள். யுக்திக்கும், நியாயத்திற்கும், அனுபவத்திற்கும் ஒத்த உண்மையாகும் இது. திராவிடர் என்பதின் கருத்து இனி திராவிடத் தன்மையைப் பற்றிச் சில கூறுகிறேன். நான் நம்மைத் திராவிடர் என்பதும், இது சரித்திர காலத் தன்மை என்பதும், உங்களை நான் அந்தக் காலத்திற்கு அழைத்துச் செல்ல விரும்புவதாகக் கருதாதீர்கள். அல்லது திராவிடர் - ஆரியர் என்று உடல் கூறு சாஸ்திரப்படி பரீட்சித்து அறிந்து பிரித்துப் பேசுவதாக கருதாதீர்கள்.

அல்லது திராவிடருக்கு என்று ஏதோ சில தன்மைகளை எடுத்துச் சொல்லி அதை சரித்திர ஆதாரப்படி மெய்ப்பித்துச் சொல்லுவதாகக் கருதாதீர்கள். இவைகள் எப்படி இருந்தாலும், இவை பிரிக்கமுடியாதனவாய் இருந்தாலும் சரி, நம்மை இன்றைய இழிவிலிருந்து, தாழ்மையிலிருந்து, முன்னேற முடியாமல் செய்யும் முட்டுக்கட்டையிலிருந்து மீண்டு தாண்டிச் செல்ல நமக்கு ஒரு குறிச்சொல் வேண்டும். சுயராஜ்ஜியம் என்றால் எதைக் குறிக்கிறது? பாகிஸ்தான் என்றால் எதைக் குறிக்கிறது? மோட்சம் என்றால் எதைக் குறிக்கிறது? வெள்ளையனே வெளியே போ என்றால் எதைக் குறிக்கிறது? என்று பார்த்தால் அவை ஒரு கருத்தை, ஒரு விடுதலைத் தன்மையை, ஒரு பயனை அனுபவிப்பதை எப்படிக் குறிப்பிடுகின்றனவோ அப்படிப் போல் நம்மை இழிவிலிருந்து விடுதலை செய்து ஒரு முற்போக்கை ஒரு பயனை அடைதலை, ஒரு மீட்சியைக் குறிப்பிட ஏற்படுத்தி இருக்கும் சொல்லாகும். ஆதலால் வார்த்தையின் பேரில் வழக்காட வேண்டிய தில்லை. திராவிடம் என்பது என்ன மொழியாய் இருந்தால் என்ன? காப்பி(பானம்) என்னமொழி? அது காலை ஆகார(பான)த்திற்கு ஒரு குறிப்பு மொழி, அவ்வளவில்தான் பார்க்கவேண்டும். பாகிஸ்தான் என்னமொழி? இந்துக்கள் என்பவர்கள் ஆதிக்கத்தில் இருந்து மீள்வதற்கு ஒரு அறிகுறி மொழி; அவ்வளவில்தான் அதைக் கருத வேண்டும். கலந்துவிட்டது என்பது... ஆரியன் திராவிடன் என்பது கலந்துபோய்விட்டது, பிரிக்க முடியாதது, ரத்த பரீட்சையாலும் வேறுபடுத்த முடியாதது என்று சிலர் வாதாடலாம். அது நமது கருத்தை அறியாமல் பேசும் அறிவற்ற பேச்சு என்றே சொல் லுவேன். ஆரிய திராவிட ரத்தம் கலந்துவிட்டிருக்கலாமே தவிர ஆரிய திராவிட ஆச்சார அனுஷ்டானங்கள் கலந்து விட்டனவா? பிராமணாள் ஓட்டல், பிராமணர்களுக்கு மாத்திரம்; பிராமணன், சூத்திரன், பறையன், சக்கிலி, பிராமணனல்லாதவன் ஆகிய பிரிவுகள் எங்காவது கலந்துவிட்டனவா? பேதம் ஒழிந்து விட்டதா? பிராமணர்கள் என்பவர்கள் உயர்வும் பாடுபடாமல் அனுபவிக்கும் போக போக்கியமும், சூத்திரர்கள், பறையர்கள், சக்கிலிகள் (திராவிடர்கள்) என்பவர்கள் இழிவும், கஷ்ட உழைப்பும், ஏழ்மையும் தரித்திர வாழ்வும் எங்காவது சரிசரி கலந்து விட்டதா? பிரிக்க முடியாதபடி ஒன்றிவிட்டதா? அல்லது அறிவு, கல்வி, தகுதி திறமை கலந்துவிட்டதா? எது கலந்து விட்டது; இரத்தம் கலந்தாலென்ன கலவாவிட்டால் என்ன? வாழ்வு, போகபோக்கியம், உரிமை கலத்தல் வேண்டாமா?

சட்டைக்காரர் என்று ஒரு கூட்டம் இருக்கிறது, இது வெள்ளை ஆரிய, கருப்பு திராவிட ரத்தக்கலப்பு என்பதில் எவருக்கும் ஆட்சேபனை கிடையாது என்றாலும், நமக்கும் அவர்களுக்கும் எதில் கலப்படம் இருக்கிறது. அவர்கள் தனிச் சமுதாயமாக வெள்ளை ஆரியர் (அய்ரோப்பியர்) போலவே ஆச்சார அனுஷ்டானங்களில் நம்மில் இருந்து பிரிந்து உயர்வாழ்வு வாழுகிறார்கள். இவர்களைப் பார்த்துக் கருப்புத் திராவிடன் இரத்தத்தால் பிரிக்க முடியாதவர்கள் என்று சொல்லுவதில் பொருள் உண்டா என்று பாருங்கள். ஆகவே, திராவிடர் என்பது நமக்கு ஒரு குறிச்சொல், லட்சியச் சொல் ஆகும். எப்படியாவது ஆரியக் கட்டுப் பாட்டால் நமக்கு ஏற்பட்டிருக்கிற கொடுமையான இழிநிலை, முட்டுக்கட்டை நிலைமாறி மேன்மை அடையவேண்டும். ஆரியம் என்றால் மாற்றத்திற்கு இடமில்லாதது; திராவிடம் என்றால் மாற்றிக்கொள்ள இடமளிப்பது என்பதுதான் உண்மைத் தத்துவமாகும். நாம் இந்தத் திராவிடர் என்ற பெயர் கொண்டு விடுவதால் நமக்கு வேறு தவறுதல்கள் எதுவும் நேர்ந்துவிடாது. நம் எதிரிகள் சொல்லும் குறும்புத்தனமான குற்றச்சாட்டுகளுக்கு அதாவது கடவுள், மதம், சாஸ்திரம், ஒழுக்கம், கலை, தர்மம், புண்ணியம், பக்திவிசுவாசம் முதலியவை எல்லாம் ஒழிக்கப்பட்டுப் போகும் என்பவை மிகவும் இழிவான குணத்தோடு நம்மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளும் புகார்களுமாகும்.

திராவிடர், திராவிட இனத்தவர், திராவிடக் கூட்டத்தவர் என்பதற்கும், இந்தக் குற்றச்சாட்டுக்கும், எவ்வித சம்பந்தமுமில்லை, இவைகள் ஒன்றும் கெட்டுவிடாது. ஆரியத்தால் தீண்டப்படாதவனான ஒரு பறையன், சக்கிலி தன்னை இஸ்லாமியன் என்று ஆக்கிக்கொண்டால் அவன்மீது இந்த இழி தன்மைகளுக்கு அருத்தம் உண்டா என்று பாருங்கள். அதோடு அவனுக்கு, அவன் பறையனாயிருந்தால் சூழ்ந்துகொண்டிருந்த அவனைப் பறையனாக்குவதற்குக் காரணமாயிருந்த கடவுள், மதம், சாஸ்திரம், கலை, ஒழுக்கம், புண்ணியம் முதலிய ஈனத் தன்மைகள் ஆரியருடையதுகள் கண்டிப்பாய் நசித்துப்போய் விடுகிறதா இல்லையா பாருங்கள். அதனால் அவன் நாஸ்திகன் ஆகிவிடுகிறானா? இல்லையே! அதற்குப் பதிலாக ஈனத் தன்மைக்குக் காரணமாயில்லாத இஸ்லாம் கடவுள், மதம், சாஸ்திரம், கலை, ஒழுக்கம் முதலியவை அவனைச் சூழ்ந்து அவன் மீதிருந்த இழிவுகளை நீக்கிவிடும். உதாரணமாக ஆரியனுக்கு உருவக் கடவுள், இஸ்லாமி யனுக்கு உருவமில்லாத கடவுள் என்பதோடு உருவக் கடவுள் வெறுப்பும் உண்டு. ஆரிய மதத்துக்கு ஜாதிபேதம், இஸ்லாமிய மதத்திற்கு ஜாதி பேதம் இல்லை; இப்படிப் பல மாறுதல்கள்தான் திராவிடனுக்கு உண்டாகலாம். இதனால் கடவுள், மதம். சாஸ்திரம், கலை, ஒழுக்கம் ஒழிந்து விட்டதாகவோ ஒழிக்கப்பட்டதாகவோ அருத்தமா? இங்குதான் உங்களுக்குப் பகுத்தறிவு வேண்டும். ஜாக்கிரதை வேண்டும். இன்றைய உலகம் எல்லாத் துறையிலும் மாறுதல் ஏற்பட்டு முன்னேற்றம் அடைந்து வருகிறதே ஒழிய நாசமாய்விடவில்லை. பழையதுகளுக்கும், பயனற்றதுகளுக்கும் சிறிதாவது குறைந்த சக்தி கொண் யுடவை நசித்துதான் போகும்; கைவிடப்பட்டுத்தான் போகும். சிக்கிமுக்கியில் ஏற்பட்ட வெறும் நெருப்பு வெளிச் சம் மறைந்து படிப்படியாக மாறி இன்று எலக்டிரிக்(மின்சார விளக்கு) வெளிச்சம் வந்ததானது நாசவேலையல்ல என்பதும்; அது முற்போக்கு வேலை என்பதும் யாவரும் ஒப்புக்கொள்ளுவார்கள். ஆதலால், ஆரம்பகாலத்தில் - பழங்காலத்தில் தோன்றிய அல்லது தோற்றுவிக்கப்பட்ட கடவுள், மதம், சாஸ்திரம், இசை, ஒழுக்கம், பக்தி என்பவை இன்றைக்கும் அப்படியே பின்பற்றப்படவேண்டும் என்றால் அது அறியாமையேயாகும். அறியாமை அல்ல என்றால், புத்தர், ஏசு, மகம்மது, ராஜா ராம்மோகன்ராய் ஆகிய கடவுள், மதம், கலை, ஒழுக்கம், பக்தி ஆகியவைகளில் மாற்றம் ஏற்படுத்தியவர்கள் நாச வேலைக்காரர்களா? எடிசன், மார்கோனி, டார்வின், சாக்கரடீஸ், லூதர், மார்க்சு, ஏஞ்சல்ஸ் ஆகியவர்கள் நாச வேலைக்காரர்களா? இவர்கள் மனித சமுதாய ஒழுக்கத்தை சமுதாய அடிப்படையைக் கலைப்பவர்களா? என்று சிந்தியுங்கள்; மாறுதல் உணர்ச்சி யால் அதுவும் முற்போக்கான பழைமையை உதறித்தள்ளின மாறுதலில்தான் பயன் உண்டாக முடியும். மாறுதல் என்று சொல்லி பழைமையைத் திருப்புவது, அதாவது ராட்டினம் கொண்டுவருவது, செல்லரித்து மக்கி ஆபாசமாகப் போன புராணங்களை உயிர்ப்பிப்பது, பழைய கோவிலைப் புதுப்பிப்பது, என்பவை மாறுதல் ஆகிவிடா. எனவே மாறுதல் கருத்தால் வெகுகாலமாக இருந்து வரும் குறைகளை இழிவுகளை நீக்கிக் கொள்ளச் செய்யும் முயற்சியை நாசவேலை என்று கருதாதீர்கள். இவ்வித மாறுதலுக்கு நீங்கள்தான், அதாவது இளை ஞர்கள், குழந்தைப் பருவமுள்ளவர்கள், ஆகியவர்கள்தான் பெரிதும் தகுதி உடையவர்கள் ஆவீர்கள். நன்றாய்ச் சிந்திக் கும் காலம் இது. சிந்தித்து வாது புரியுங்கள், விவகாரம் கிளப்புங்கள்.

அதனால் அனுபவம், அறிவு முதிர்ச்சி பெறு வீர்கள். உங்கள் வாதத்தால் உங்கள் ஆசிரியர்களுக்கும் சிந்திக்கும் சக்தியும் பகுத்தறிவும் தோன்றும்படி வாது புரியுங்கள். நீங்கள் காரியத்தில் இறங்க உங்களுக்கு இன்னும் சற்று அனுபவம் பெறுங்கள். யாவர் சொல் வதையும் காது கொடுத்துக் கேளுங்கள், கேட்டவை களைச் சிந்தித்துச் சிந்தித்து உண்மை, நேர்மை கண்டு பிடிக்க வாதம் செய்து, கேள்வி கேட்டு அனுபவம் பெறுங்கள். எனவே, நான் இவ்வளவு நேரம் சொன்னவைகளில் உள்ள குற்றம் குறைகளை உங்கள் தலைமை ஆசிரியரும், இக்கூட்டத் தலைவருமான அறிஞர் திருத்துவார். (09.07.1945 ஈரோடு மகாஜன ஹைஸ்கூலில் சரஸ்வதி ஹாலில் திராவிட மாணவர் கழகத்தில் பெரியார் ஈ.வெ.ராமசாமி ஆற்றிய சொற்பொழிவு)
குடிஅரசு - சொற்பொழிவு - 14.07.1945

25-09-2011 விடுதலை பக்கம் 2

weather counter Site Meter