Pages

Search This Blog

Saturday, April 14, 2012

திராவிடம் என்பது கற்பனையா?

திராவிடம் என்பது கற்பனை; அது ஒரு மாயை; கால்டுவெல் பாதிரிக்கு பிராமணர்மீது ஏற்பட்ட வெறுப்பின் காரணமாகவே திராவிடம் என்பதனை விளம்பரப்படுத்தித் தனக்குப் புகழ் சேர்த்துக் கொண்டார். திராவிட இயக்கத்திற்கு இப்போது நூற்றாண்டு விழாக் கொண்டாட வேண்டிய அவசியம் என்ன? _ என்று பார்ப் பனர்களும் அவர்தம் அடிவருடிகளும் கேள்விக் கணை தொடுத்திருக்கிறார்கள்.

அரசியலில் ஏதிலிகளாக்கப்பட்ட வர்களும், தமிழ் இன எதிரிகளும், வரலாறு தெரியாத - _ வடிகட்டிய தற் குறிகளைப் போலப் பேசி வருகின்றனர். வரலாற்றை முறையாகத் தெரிந்து கொள்ள வேண்டும்; அல்லது வரலாறு தெரிந்தவர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல் சிலர் உளறி வருகிறார்கள்.

அண்மையில் செய்தியாளர்களிடம் ஒரு தலைவர், குடியரசுக் கட்சியில் பெரியார், தமிழ்நாடு தமிழருக்கே என்று எழுதினார் என்று பேசுகிறார். குடிஅரசு இதழுக்கும், குடியரசுக் கட்சிக்கும் வேறுபாடு தெரிய வேண்டாமா? அதுவும் கட்சியில் எப்படி எழுதுவது? இவர்களின் வரலாற்றறிவு எப்படிப்பட்டது தெரியுமா? இளம் தலைவர் பேசுகிறார், நாம் பல்லவ வம்சத்தைச் சேர்ந்தவர்கள்; நாம் ஆளப் பிறந்தவர்கள்
பல்லவர்கள்
பல்லவர்கள் வடபுலத்திலிருந்து வந்தவர்கள். சமற்கிருதத்தைத் தாய் மொழி எனப் போற்றியவர்கள். அதற்கு இலக்கியம் படைத்துக் கொடுத்தவர்கள். பல்லவர் பெயர்களைப் பார்த்தாலே தெரியுமே! அவர்களில் ஒருவன் கூடத் தமிழன் இல்லை என்பது! தமிழ் மக்களின் செல்வத்தையெல்லாம் பார்ப்பனர்களுக்கு வாரி வழங்கிய வர்கள் பல்லவர்கள்! நீங்கள் அவர்கள் வழி வந்தவர்களா?

நாட்டை ஆள வேண்டும் என்ற நசையோடு அலையும் இவர்கள் அந்த நாட்டின் வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டாமா? அந்த நாட்டு மக்களின் மொழியைப் பிழையின்றிப் பேச வேண்டாமா? இந்த விளக்கெண்ணெய் வேலைக்கிடையில், திராவிடம் என்பது மாயை, திராவிடத்தால் வீழ்ந்தோம்; சங்க இலக்கியத்தில் திராவிடம் என்பது இல்லை என்று வேட்டியை உருவித் தலையில் கட்டிக் கொண்டு வீதி வீதி யாய்ப் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

திராவிடம் தோன்றியது எப்போது?

ஆரியர் _ -திராவிடர் என்ற வேற் றுமையை விதைத்தவர் கால்டுவெல் தான்; திராவிடம் என்ற கற்பனையான ஒரு சொல்லைப் படைத்தவரும் அவர்தான்! என்று இப்போது பார்ப்பனர் புதுக்கரடி விடுகிறார்கள். இப்படியெல்லாம் பிற்காலத்தில் பார்ப்பனர்கள் பேசுவார்கள், வெட்கமில்லாமல் பொய்யுரைப்பார்கள் என்பதை அறிந்தோ என்னவோ கால்டுவெல் பெருமகனார் தொலை நோக்குப் பார்வையோடு தமது கருத்துக்களை வெளியிட்டார்.

திராவிடம் என்பது எனது படைப்பல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பண்டைய வடமொழி ஆசிரியர் இதனைப் பயன்படுத்தியுள்ளனர். இச்சொல்லைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தவர்கள் ஆரியப் பார்ப்பனர்களேயன்றி நானில்லை என்று அறிஞர் கால்டுவெல் கம்பீரமாக நின்று உண்மையை வெளிப்படுத்து கிறார்.

மனுஸ்மிருதியில் பத்தாவது பிரிவில் சத்திரியக் குடியினர், படிப்படியாக ஆரியப் பழக்க வழக்கங்களிலிருந்து வழுவிப் பார்ப்பனர் தொடர்பை விட்டு விலகிக் கீழ்ச் சாதியினர் ஆனார்கள். அவர்கள் பவுண்டரர்கள், ஒட்ரர் திராவிடர், காம்போசர் என்று கூறப் பட்டுள்ளது. மேற்குறித்த குடியினரில் தென்னிந்தியாவிற்குரியவர் திராவிடர் என்று குறிக்கப்பட்டவர்களேயாவர். இதனால் தென்னாட்டு மக்களைப் பொதுப்படையாகக் குறிப்பதற்குத் திராவிடம் என்ற குறியீடு எடுத் தாளப்பட்டுள்ளமை தெளிவாகின்றது என்றும் மகாபாரதத்திலும் திராவிடம் என்ற சொல்லாட்சி இப்பொருளிலேயே பயின்று வந்துள்ளது என்றும் டாக்டர் கால்டுவெல் விளக்கமாகத் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் தம்முடைய நூலில் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். ஆதலின் கால்டுவெல் கண்காணியாரின் (பாதிரி யார்) காலத்திற்குப் பல நூற்றாண் டுகளுக்கு முன்பிருந்தே திராவிடம் என்ற சொல்லாட்சி, பயன்பாட்டில் இருந்து வந்துள்ளமை புலனாகின்றது.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது:

திராவிடம் என்ற சொல் பார்ப்பனர்கள்மீது ஏற்பட்ட வெறுப்பினால் தோன்றியதல்ல மாறாகப் பார்ப்பனர் தமிழ்மக்கள்மீது கொண்ட வெறுப்பினால் அவர்களை இழிபிறப்பினர் என்று சுட்டுவதற்காகத் திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளனர் என்பதைப் பார்ப்பனர் நூலாகிய மனுதருமம் தெளிவுபடுத்துகிறது.

திராவிடம் மூவாயிரம் ஆண்டுத் தொன்மையுடையது. மாமன்னர் அசோகன் காலத்துக் கல்வெட்டு ஒன்றில் இச்சொல் தென்னாட்டு மக்களை (தமிழர்களை) குறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. புகழ்வாய்ந்த ஓர் இனத்தையும், இடத்தையும் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு சொல் திடுமெனத் தோன்றியிருக்க முடியாது. மக்கள் வழக்காற்றில் அச்சொல் பயின்று பயின்று பண்பட்டுப் பல நூற்றாண்டுகளைக் கடந்து வந்திருக்க வேண்டும்.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்பு தோன்றியதாகப் பார்ப்பனர் கொண்டாடும் மனுதரும சாத்திரம் திராவிட மக்களைச் சூத்திரர்கள் என்று இழிவுபடுத்திக் கூறுகிறது. திராவி டத்தைச் சூத்திரர் வாழும் நாடு என்று சுட்டுகிறது. மனுதருமம் (சுலோ 44 அத்தியாயம் 5) ஆனால் மாமன்னன் அசோகன் காலத்துக் கல்வெட்டு, தென்னாட்டையும், தென்னாட்டு மக்களையும் பெருந்தன்மையோடு திராவிடம் என்ற சொல்லால் குறிக்கின்றது. மாமன்னன் அசோகன் வட இந்தியாவின் பெரும்பகுதியை தன் ஆட்சியின்கீழ் வைத்திருந்தவன். கலிங்கம் (ஒரிசா) வரைதான் அவனால் தெற்கே படையெடுத்து வர முடிந்தது. கலிங்கத்திற்குத் தெற்கில் தமிழர்கள் வலிமையோடிருப்பதையறிந்து தெற்கே வர வேண்டும் என்ற எண்ணத்தைக் கலிங்கப் போருக்கு முன்பே கைவிட்டவன் மாமன்னன் அசோகன். அவன் திராவிட மக்களை மதித்தவன் பேரரசன்! ஆனால் நாடோடிகளான ஆரியப் பார்ப்பனர்கள், திராவிடத்தைச் சூத்திரர் வாழும் நாடு என்று இழிவு படுத்திக் கூறியவர்கள்.

திராவிடம் என்ற சொல் கி.பி. முதல் நூற்றாண்டில் எழுத்தாளப்பட்டுள்ள தாகவும் இச்சொல் தமிழர்களைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ள தாகவும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மொழியியல் அறிஞரான சுனித்குமார் சட்டர்ஜி குறிப்பிடுகிறார்.

மனுவின் காலத்திற்குப்பின்னர்

மனுவின் காலத்திற்குப் பின்னர் வந்த வடமொழி ஆய்வாளர் பலரும் திரா விடம் என்ற சொல்லைத் தொன்னாட்டு மொழியினத்தைக் குறிப்பதற்கே எடுத்தாண்டுள்ளனர் என்பதையும் இந்திய பாகத மொழிகளைத் தொகைப் படுத்தி இனம் பிரித்த பண்டைய ஆராய்ச்சியாளர்கள் திராவிடி எனும் பெயரால் திராவிட மொழியினத்தைச் சேர்த்துள்ளனர் என்பதையும் கால்டு வெல் எடுத்துக்காட்டுகிறார். மேலும் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த வராகக் கருதப்படும் சிறந்த வடமொழி அறிஞரான குமரிலபட்டர் என்பார் திராவிடாதி பாஷா என்ற சொற் றொடரைக் கையாண்டுள்ளதாகவும் அறிஞர் கால்டுவெல் குறிப்பிடுகிறார். இவ்வாறு எண்ணற்ற சான்றுகளை எடுத்துக்காட்டித் திராவிட என்ற சொல் மிகப் பழங் காலந்தொட்டே தென் னாட்டு மக்களையும் மொழியையும் குறிக்கும் ஒரு பொதுச் சொல்லாக வடமொழியாளர்களால் பயன்படுத்தப் பட்டு வந்துள்ளது என்று கால்டுவெல் நிறுவுகிறார்.

மேலும் இந்தியத் தொல்குடியினரில் ஒருவராகிய சத்திய விரதர் என்ப வரைப்பற்றிக் குறிப்பிடும்போது பாகவத புராணம் திராவிட மன்னர் என்று குறிப்பிடுவதாகவும் கால்டுவெல் கூறுகிறார்.-   (தொடரும்)http://viduthalai.in/page2/31986.html

No comments:


weather counter Site Meter