Pages

Search This Blog

Saturday, April 14, 2012

திராவிடரைச் சீண்டும் ஆரியம்

தமிழ்நாட்டை எடுத்து கொண்டால் வீடு இல்லாதவர் களுக்கு வீடு கட்டித் தருகிறோம் என்ற வாக்குறுதிக்கு இங்கே அமோகமாக ஒட்டுகள் குவிகின்றன. வீடே இல்லா விட் டாலும் சரி.. பொதுக் கழிப்பிடம் கட்டித் தருகிறோம் என்று சொல்லி சுகாதாரத்தை மேம்படுத்தத்தான் யாரும் இல்லை.

இருள் பிரியும் நேரத்தில் ஒதுக்குப்புறப் புதர்களையும் தண்டவாள ஓரத்தையும் நோக்கி பெரும்பான்மைத் தமிழர்களைக் கூனிக் குறுகி ஒதுங்க வைத்ததுதான் திராவிடக் கட்சிகள் இத்தனை ஆண்டுகளில் ஆற்றிய சாதனையா? தன்மானம், சுயமரியாதை என்று சொல்லியே மாறி மாறி ஆட்சிக்கு வந்தவர்கள், தமிழனின் சுயமரியாதைமேல் கொண்டு இருக்கும் மரியாதை இவ்வளவுதானா என்று தலையங்கத்தில் எழுதுகின்றது ஆனந்தவிகடன் (10.4.2012).

பார்ப்பன ஏடுகளின் ஒரே இலக்கு என்ன தெரியுமா? எந்தப் பல்லவியைத் தொடங்கினாலும் சரணம் என்பதுமட்டும் கண்டிப்பாக திராவிடர் இயக்கத்தைக் கொச்சைப்படுத்த வேண் டும் என்பதுதான்; இதில் ஆனந்தவிகடனும் விதி விலக்கு இல்லை என்பதற்கு மேலே கண்ட எடுத்துக் காட்டுப் போது மானது. ஆர்.கே. சண்முகம் (செட்டியார்) முதல் நிதி அமைச் சர் ஆனபோது செக்குப்படம் போட்டு அவர் ஜாதியைச் சுட்டிக்காட்டிய ஏடாயிற்றே -_ இன்றுவரை அது தொடர்கிறது.

தமிழ்நாட்டில்தான் போதுமான கழிவறைகள் இல்லை; பா.ஜ.க., ஆளும் கருநாடகத்திலோ, மத்திய பிரதேசத்திலோ எல்லோருக்கும் கழிவறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டு விட்டனவா?

அங்கே கழிப்பறைகள் இல்லாததற்குக் காரணம் திராவிடர் இயக்கத்தின் தாக்கம் என்று சொல்லுவார்களோ!

திராவிடர் இயக்கத்தைக் கொச்சைப்படுத்த வேண்டும் என்பதிலே பார்ப்பனர்களோடு தமிழ்த் தேசியவாதிகளும் கை கோர்க்கத் தயாராகி விட்டதால், பார்ப்பனர்களுக்கு மேலும் தைரியம் பொத்துக் கொண்டு கிளம்பி விட்டது போலும்!

இந்தத் திராவிடர் என்ற சொல்லைக் கேட்டாலே பார்ப்பனர் களுக்கு அதிர்ச்சியும் ஒவ்வாமையும் தானே!

திராவிடர் என்றாலே ஆரியர் என்பது எதிரே பஞ்சக் கச்சம் கட்டி நிற்கிறதே! இந்த எதிர்ப்புணர்வு தானே தமிழ் நாட்டில் ஆரியப் பார்ப்பனர்களின் ஆதிக்க வேர்களைச் சாய்த்தது? வருணாசிரமத் திமிரை நொறுக்கியது. எங்களுக்கும் இடஒதுக்கீடு தாருங்கள் என்று பிச்சைப் பாத்திரம் ஏந்தும் ஒருநிலையை ஏற்படுத்தியது. மாநிலத்தில் மட்டும் இந்த பிற்படுத் தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு அகில இந்திய அளவி லும் கொண்டு வந்ததற்குக் காரணம் இந்த் திராவிடர் இயக்கம் தானே?

கோவில் கருவறைக்குள் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை தூக்கி எறிய அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற சட்டத்தைக் கொண்டு வந்ததும் இந்தத் திராவிடர் இயக்கம்தானே!

பார்ப்பனர் புரோகிதர்களை அழைத்துத்தான் தங்கள் வீட்டுக் கல்யாணங்களை நடத்தியாக வேண்டும் என்கிற நிலையை மாற்றி சுயமரியாதைத் திருமணத்தை அறிமுகப் படுத்தி, அதற்குச் சட்ட வடிவம் கொண்டு வந்ததும் இந்தத் திராவிடர் இயக்கம்தானே!

அறநிலையத்துறை சட்டத்தைக் கொண்டு வந்து அக்கிர காரத்தின் தனி உடைமையாக இருந்த கோவில்களிலிருந்து பார்ப்பனர்களை வெளியே தூக்கி எறிந்ததும் இந்தத் திராவிடர் இயக்க ஆட்சிதானே?

சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டடி என்ற முழக்கத் தைக் கொடுத்ததும் தன்மான இயக்கமான திராவிடர் இயக்கம் தானே?

அதனால் திராவிடர் இயக்கத்தைக் கொச்சைப்படுத்தும் போது அந்தத் தன்மானம் என்ற சொல்லையும் சேர்த்துக் குதறுகிறது -_ ஆரியம்
திராவிடர்களைச் சீண்டுகிறது ஆரியம் _ திராவிடரே எச்சரிக்கை! எச்சரிக்கை!!
http://viduthalai.in/page7/31996.html 

No comments:


weather counter Site Meter