Pages

Search This Blog

Saturday, August 6, 2011

சஞ்சீவி

ஆரியத்தலைவர், பதவியை விட்டு வெளியேறி விட்டார். இனி ஆரியர்கள் நாட்டை விட்டு வெளியேறியே தீரவேண்டும். இந்த லட்சி யத்தை எக்காரணம் கொண் டும் திராவிட இனத்தவர் மறந்துவிடக் கூடாது. இது தான் சர்வரோக சஞ்சீவி!

- இது விடுதலை ஏட்டின் குரல்! (29.4.1954)

- வருணாசிரமக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்து 6000 கிராமப் பள்ளி களை மூடி அரைநேரம் படித்தால் போதும்; மீதி அரை நேரம் மாணவர்கள் அவர வர்களின் அப்பன் தொழி லைத்தான் செய்யவேண்டும்; ஆசிரியர்கள், மாணவர்கள் மாலை நேரத்தில் அவரவர் களின் குலத் தொழில்களை ஒழுங்காகச் செய்து வருகி றார்கள் என்று மேற் பார்வையிட வேண்டும் என்று 1954 இல் கூட, உடம் பெல்லாம் மூளை உடையவர் என்று அக்கிரகாரத்தால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடப்பட்ட சக்ர வர்த்தி ராஜகோபாலாச்சாரி யார் சட்டம் போட்டார் என் றால் - இந்தப் பார்ப்பனர் களைப்பற்றி எப்படி எடை போட?

தந்தை பெரியார்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக் குத் தொடுக்கப்பட்டபோது சென்னை உயர்நீதிமன்றத் தில் தந்தை பெரியார் கொடுத்த அறிக்கையில் ஒன்றை மிக அழுத்தமாகக் குறிப்பிட்டார்.

பார்ப்பான் நீதிபதியாய், ஆட்சியாளராய் இருக்கும் நாடு கடும் புலி வாழும் காடேயாகும். ஆதலால் நாங் கள் புலி வேட்டை ஆடுகி றோம். புலிமேலே பாய்ந்தால் ஒருவர் இருவர் அடிபட வேண்டியதுதான்.

எல்லா பார்ப்பனர்களும் அப்படித்தானா? என்று கனம் ஜட்ஜுகள் சிந்தித்து நான் சொல்லுவதைத் தவறு என்று கருதலாம். நம் நாட்டில் இன் றைய தினம் உள்ள பார்ப்பனர் களில் ஆச்சாரிய புருஷர் களாய் இருக்கிறவர்களைத் தள்ளிவிட்டு, எல்லோரையும் ஒன்று போல் பாவித்து, பொது ஜன நன்மைக்காகப் பாடுபடு கிற பார்ப்பனர்கள் என்று எண்ணியிருக்கின்ற தன்மை யில், உயர்ந்த சீர்திருத்தக் காரர் - நாட்டின் விடுதலைக் காக பெரிய தியாகங்களைச் செய்தவர் என்ற தன்மையில் இதுவரை எந்த இந்தியனும் வகித்திராத உயர்ந்த பதவி வகித்தவர் என்ற தன்மையில், முதல் வரிசையில் முதல்வராக இருக்கும் மாஜி கவர்னர் ஜெனரல் உயர்திரு சி. ராஜ கோபாலச்சாரியார் அவர்கள் சொல்லுகிறார்கள்: நான் வேத, சாஸ்திர, புராண, இதி காச, உபநிஷத் தர்மங்களில் முழு நம்பிக்கை உடையவன்; ஜாதிப் பிரிவில் அதாவது, வர்ணாஸ்சிரம தர்மத்தில் மிக்க நம்பிக்கையும், கவலை யும் உடையவன்; அவை களைப் பரப்பவும், நிலை நிறுத்தவும் பாடுபடுகிறேன்; இனியும் அதற்காகவே பாடு படுவேன் என்று சொல்லு கிறார்; எழுதுகிறார்; அதற்கு வேண்டிய காரியங்களையும் செய்கிறார் என்றால், இனி யாரை மனதில் வைத்துக் கொண்டு எல்லாப் பார்ப் பனர்களும் இப்படி இருப்பார் களா என்று நினைப்பது? என்று சென்னை உயர்நீதி மன்றத்திலேயே பதிவு செய் துள்ளார் தந்தை பெரியார்.

ஆம், இன்றுவரை இப் படித்தான் இருக்கிறார்கள். செம்மொழித் தமிழ் வரை எதிர்க்கின்றார்கள்.

வெறுக்கத் தெரிந்த வனே வெற்றி பெறுவான் - அந்த வெறியோடு நாகை மாநாட்டுக்கு வாருங்கள் இளைஞர்களாகிய புலிப் போத்துகளே!

- மயிலாடன்

http://viduthalai.in/new/e-paper/15325.html

No comments:


weather counter Site Meter