Pages

Search This Blog

Sunday, September 29, 2013

பார்ப்பன அயோக்கியத்தனம்

அகில இந்திய பிராமண சம் மேளனம் என்பதாகப் பேர் கொண்டு தஞ்சாவூர் ஜில்லாவில் உள்ள ஒரு மூலை கிராமத்தில் வக்கீல் பார்ப்பனர், உத்தியோகப் பார்ப்பனர், பஞ்சாங்கப் பார்ப்பனர், காப்பிக்கடை பார்ப்பனர், தூதுவப் பார்ப்பனர் ஆகிய பலதிறப்பட்ட சுமார் 100 உருப்படிகள் கூட்டம் கூடி ஒன்று சேர்ந்து அகில இந்தியப் பிராமண சம்மேளனம் என்பதாகப் பேர் வைத்துக் கொண்டு பல தீர்மானங்கள் செய்து இதை இந்தியாவிலுள்ள இந்துக் கள் என்று சொல்லப்படும் 25 கோடி மக்களுக்குக் கட்டுப்பட்டதாக கருதும் படி சூழ்ச்சி  செய்து இருக்கிறார்கள். அங்கு நடந்த தீர்மானங்களையும் மகாநாட்டின் வரவேற்பு அக்கிராசனர் மகாநாட்டின் தலைவர் ஆகியவர்கள் பிரசங்கங்களும் படித்துப் பார்த்தால் உண்மையான கலப்பற்ற பார்ப்பனரல் லாதார்களின் இரத்தம் கொதிக்காம லிருக்கவே முடியாது. அவ்விருவர் பிர சங்கத்திலும் ஒற்றுமையாகக் காணப் படும் விஷயங்கள் பல இருந்தாலும் அவற்றில் முக்கியமானது இத்தேசத்தில் இந்துக்களில் பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் எல்லாம் சூத்திரர்கள் என்றும் சத்திரியரும் வைசியரும் கிடை யாது என்றும் பேசியிருக்கிறார்கள், சத்திரியரும் வைசியரும் இந்நாட்டில் இல்லை என்பதைப் பொறுத்தவரையில் நமக்கு சந்தோஷமே. நாமும் அப்படித் தான் தீர்மானித்திருக்கிறோம். மற்றபடி யார் யார் தங்களை சத்திரியர்கள் என்றும் வைசியர்கள் என்றும் எண்ணிக் கொண்டு பார்ப்பனர்களைப் போல் பூணூல் போட்டுக்கொண்டு திரிகிறார் களோ அவர்கள் பார்ப்பனர்களிடம் போய் கெஞ்சி தங்கள் சத்திரிய வைசிய உரிமைகளைக் காப்பாற்றிப் பார்ப் பனர்களின் சத்திரியர் மக்கள் அல்ல என்பதை நிருபித்துக் கொள்ளட்டும். நமக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை. ஆனால் பார்ப்பனர்கள் தவிர மற்றவர் கள் சூத்திரர்கள் என்று சொன்னது தான் நமக்கு மிகுதி ரத்தத் துடிப்பையும் உண்டாக்குகிறது.
பார்ப்பனர்கள் இந்த நாட்டுக்குக் பிழைக்க வந்தவர்கள் என்பதில் யாருக்கும் ஆட்சேபனை இருக்காது என்றே நினைக்கிறோம். அவர்கள் ஒரு இழிந்த ஜாதியார் என்பதிலும் யாருக்கும் ஆட்சேபனை இருக்க நியாயமில்லை. நமது அகாரதிகளிலேயே ஆரியர் என் றால் மிலேச்சர் என்று குறிப்பிடப்பட்டி ருப்பதும் அதுவும் அவர்களால் ஒப்புக் கொண்ட அகராதிகளில் காணப்படு வதும் அவர்களது நாகரிகமோ அவர் களால் எழுதி வைத்திருக்கும் வேதம், சாஸ்திரம், ஸ்மிருதி புராணம், இது களால், அவர்கள் தமிழ் மக்களாகிய நமது நாகரிகத்திற்கு எவ்வளவு கீழ்பட்டது என்பதும் அருவருக்கத் தக்கது என்பதும் ஆராய்ச்சி உள்ளவர் களுக்கு நன்றாகத் தெரியும் அதாவது பார்ப்பன ஸ்திரீகள் விபசாரம் செய்து விட்டால் கர்ப்பம் தரிக்காமலிருந்தால் வீட்டிற்குத் தூரமானவுடன் அந்தத் தோஷம் தீர்ந்து விடுகிறது என்ற பராசர ஸ்மிருதி பிராயச் சித்த காண்டம் 1வது காண்டம் 2வது சுலோகத்தில் சொல்லப் பட்டிருக்கிறது. அதே சுலோ கத்திற்கு விரிவுரை எழுதுகை யில் பிராமண ஸ்திரீ சூத்தி ரனைப் புணர்ந்து விட்டால் மாத்திரம் பிராயச்சித்தம் செய்ய வேண்டுமென்றும் அதுவும் தினம் ஒரு கவள அன்னம் வீதம் 15 நாளைக்கும் குறைத்துக் கொண்டு வந்து 16ல் நாள் முதல் தினம் ஒரு கவள அன்னம் வீதம் உயர்த் திக்கொண்டு வந்து விட்டால் போதுமானது என்று இருக் கிறது இதுதான் பிராமண ஸ்திரீகளின் விபசாரத்திற்குப் பிராயச்சித்தம். மற்றபடி கர்ப்பம் தரித்து விட்டால் மாத்திரம் மிகவும் தோஷமான தென்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதே ஸ்மிருதி பிராயச்சித்த காண்டம் 7வது அத்தியாயம் 23வது சுலோகத்தில் பூமியானது எப்படியோ அப்படியே ஸ்திரீகளுமாகையால் அவர்கள் தூஷிக்கத் தக்கவர்கள் அல்லர்கள் என்று குறிப்பிட்டிருக்கிறது. இதன் விரிவுரையில் பூமியை யார் தொட்டாலும் உபயோகப்படுத்தினாலும் எப்படி சுத்தி செய்வதன் மூலம் அங்கிகரிக்கப் பட்டிருக்கிறதோ அப் படியே ஸ்திரீகளும் சண்டாள சங்கமம் செய்த ஸ்திரீகளும் பிராயச்சித்தம் செய்து அங்கீகரித்துக் கொள்ளலாம் என்று எழுதி இருக்கிறது.
அன்றியும் எருமை, கழுதை, ஒட்டகம் இவைகளையும் புணரும் பிராமணன் ஒரு நாள் உபவாசமிருப்பதால் சுத்தனா கிறான் என்று அதேஸ்மிருதி அதே அத்தியாயம் 14வது சுலோகத்தில் சொல்லியிருக்கிறது. இது போலவே தனது தாயையும் குமாரத்தியையும் சகோதரி முதலியவர்களையும் புணரும் படியான திலும் அறிந்தும் அறியாமலும் நிலையாகவும் நடந்துகொள்ளும் விஷ யத்திலும் பிராயச்சித்தங்கள் சொல்லி இருக்கிறது. இப்பிராயச்சித்தங்களில் பெரும் பாலும் பிராமணருக்குக் கொடுக்க வேண்டியதும் பட்டினி முதலியவை இருக்க வேண்டியதுமான சாதாரண பிராயச்சித்தங்களேதான், இன்னும் அதுகளில் உள்ள ஆபாசங்கள் அநேகம். இவற்றை நாம் எடுத்துச் சொன்னதின் கருத்து என்னவென்றால் எப்படிப்பட்ட யோக்கியர்கள் நம்மை சூத்திரர்கள் அதாவது பார்ப்பனர்களுடைய வைப் பாட்டி மக்கள், பார்ப்பனருக்குத் தொண்டு செய்யக் கடவுளால் பிறப்பிக் கப்பட்டவர்கள் என்று சொல்லுகிறார்கள் என்பதைக் காட்டவும் நமது நாகரிகங் களுக்கும், அவர்களது நாகரிகங்களுக்கும் உள்ளவித்தியாசத்தைக் காட்டி யார் உயர்ந்தவர்கள் யார் தாழ்ந்தவர்கள் என்பதைக் காட்டவுமேதான் எடுத்துக் காட்டி இருக்கிறோம்.
தற்காலம் நமது நாட்டில் உள்ள மக்களின் உணர்ச்சியும் அதனால் ஏற்பட்டிருக்கும் உணர்ச்சியையும் நன்றாகப் பார்த்துக் கொண்டிருக்கிற பார்ப்பனர்கள் பார்ப்பன மகாநாடு கூட்டி நாம் பிராமணர்கள்தான் மற்ற வர்கள் நமது வைப் பாட்டி மக்கள்தான், சண்டாளர்கள்தான் என்பதாகத் தீர்மானம் செய்திருப்பதாக வெளிப்படுத் துவார்களானால், அவர்களின் தைரியத்யும் அயோக்கியத்தனத்தை யும் என்னவென்று சொல்வது இன் னமும் அம்மகாநாட்டில் தீர்மானித்து இருக்கும் தீர்மானப் பிரகாரம் ஒவ்வொரு கிராமத்திலும் பார்ப்பனிய சபைகளும் பிரசாரங்களும் நடைபெற வேண்டுமென்றும் பார்ப்பனரல்லாதார் கோரும் சீர்திருத்தங்களை யெல்லாம் கண்டித்தும் தீர் மானங்கள் செய்யப்பட்டி ருப்பதுடன் மகாத் மாவின் சமூகத்திருத்தக் கொள்கை களையும் கண்டித்துப் பேசப் பட்டிருக்கிறது.
இந்தக் கூட்டத்திற்கு அரசாங்க உத்தியோகஸ் தர்களும் நீதி நிர்வாக இலாக்காகளில் தீர்ப்புச் சொல்லக்கூடிய அதிகாரி களும் சம்பந்தப்பட்டிருப் பார்கள் என்றால் நமது சுயமரியாதையைப் பொருத்த அல்லது சுயமரியாதை விஷ யம் சம்பந்தப்பட்ட விஷயங் களில் இவர்களுடைய தீர்ப்பு கள் எப்படி இருக்கும் என்று சொல்லவும் வேண்டுமா? என்று கேட்கிறோம். இந்தக் கூட்டத்தார் தானே அரசிய லிலும் நமக்குச் சுயராஜ்ஜியம் வாங்கிக் கொடுக்கிறவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் வாங்கிக்கொடுக்கும் சுயராஜ் ஜியமும் நமது பெண்கள் மலையாளம் போல் அவர்களுக்கு வைப்பாட்டிகளாக இருக்கத்தானே அல்லாமல் வேறு என்ன விதமான சுயராஜ்ஜியம் இவர் களால் வரக்கூடும், என்பது நமக்கு விளங்கவில்லை.
மகாத்மா கேட்கும் சுயராஜ்ஜியமே இந்த பார்ப்பனர்களுக்கு தேசத் துரோகமாய் பார்ப்பனத்துரோகமாய் இந்து மதத் துவேஷமாய் போய்விட்டது. இப்படியிருக்க நம்மவர்கள் இதைப்பற்றி ஒரு சிறிதும் கவலைப்படாமல் இனியும் வயிற்றுப் பிழைப்புச் சண்டையே அதாவது பார்ப்பனர்கோரும் சுயராஜ் ஜியச் சண்டையே பலமாகக் கிளப்பி விட்டுக் கொண்டிருக்கிறார்கள் இந்தப் பாழும் சுயராஜ்ஜியத்தினால் யாருக்கும் என்ன பலன் கிடைக்கப்போகிறது. என்பது இன்னமும் பாமர மக்கள் அறியாததே நமது நாட்டில் துர திஷ்டமாயிருக்கிறது, அறிந்திருந்தால் இந்தப் பார்ப்பனசம்மேளனக் கொடுமை இன்னும் நமது நாட்டில் உயிர் வைத்துக் கொண்டிருக்க நியாயமே இல்லை. ஆதலால் பார்ப்பனரல்லாத மக்களே! இந்தப் பார்ப்பனக்கொடுமையில் இருந் தும் அவர்களது வைப்பாட்டி மக்கள் என்கிற இழிகையில் இருந்தும் தப்ப என்ன ஏற்பாடுகள் செய்யப் போகி றீர்கள்? கிராமங்கள் தோறும் சுய மரியாதைச் சங்கங்கள் ஏற்படுத்தி பார்ப்பனக் கொடுமையை ஒழிப்பது தவிர நமக்கு வேறுகதியில்லை, சுயராஜ்ஜியப் பேச்சு பேசிக்கொண்டு பார்ப்பனர்கள் காலுக்கு முத்தமிட்டுத் தேசத்தின் பேரால் பிழைப்பவர்கள் பிழைக்கட்டும் சுயமரியாதையில் கவலை யில்லை. உள்ளவர்கள் இந்த வேலை பார்த்தால் போதும்.
- குடிஅரசு - துணைத் தலையங்கம் - 19.06.1927

29-09-2013 விடுதலை நாளிதழ் பக்கம் 2

No comments:


weather counter Site Meter